يحاول ذهب - حر

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

January 03, 2026

|

Dinamani Dharmapuri

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

நாட்டில் அவசர நிலை பிரகடனத்தின்போது அதை எதிர்த்து துணிச்சலுடன் குரல் கொடுத்து, கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மேலும், இலக்கியமும், அச்சமில்லாமல் கருத்து தெரிவிப்பதும் ஜனநாயகத்துக்கு முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் மூன்றாம் ஆண்டு விருது வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

படைப்பாளிகளுக்கு விருதுகள்:

சுதந்திரப் போராட்ட வீரரும், பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான மறைந்த ராம்நாத் கோயங்காவின் நினைவாக சிறந்த இலக்கியப் படைப்பு எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. நிகழாண்டுக்கான விருதுகளுக்கு தேர்வான கன்னட எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த புனைவுப் பிரிவில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுபிதாபாவுக்கும் (நூல்: டேல்ஸ் ஃபிரம் தி டான்லிட் மவுன்ட்டன்ஸ்), அபுனைவு பிரிவில் எழுத்தாளர் சுதீப் சக்கரவர்த்திக்கும் (நூல்: ஃ பாலன் சிட்டி), அறிமுக எழுத்தாளர் நேஹா தீக்ஷித்துக்கும் (நூல்: தி மெனி லைவ்ஸ் ஆஃப் சயீதா எக்ஸ்) விருதுகளையும், பரிசுத் தொகையையும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்த்திய உரை: சமூகத்துக்கான உயரிய சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ராம்நாத் கோயங்கா. பத்திரிகையை அறிவுசார் துணிச்சலுக்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அவர் பயன்படுத்தினார்.

சிந்தனைச் சுதந்திரம் மூலம் துணிச்சலையும், உறுதியையும் நிலைநாட்ட முடியும் என்று அவர் நம்பினார்.

பொது வாழ்வில், மக்களின் கேள்விகளுக்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் பொறுப்பேற்று உரிய பதிலளிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஜனநாயக விழுமியங்களுக்காக தனது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். துணிச்சலாக பத்திரிகை நடத்தினார். இன்று துணிச்சலாக கருத்துகளை வெளியிட அவர்தான் காரணம்.

المزيد من القصص من Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கு விற்பனையானது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Dharmapuri

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size