அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!
April 25, 2025
|Dinamani Cuddalore
மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறையாகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு உலக நாடுகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உன்னதமான அமெரிக்காவை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்துடன் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிடுகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு, வர்த்தகம், இளைஞர் நலன் இவற்றில் கவனம் செலுத்தும் முடிவுகள் உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகநாடுகள் மீது வர்த்தக வரிகளை மாற்றி அமைத்துள்ளார். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் அதிகபட்சமாக 40 சதவீதத்துக்கும் மேல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மனிதர்களே இல்லாத தீவுகள்கூட, வெள்ளை மாளிகையின் வரி விதிப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன எனப் பலநாடுகளும் அதிர்ச்சி அடைந்துள்ளன. பென்குயின்கள் மட்டுமே வாழும் ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்கள் என்றாலும் அங்கே மனிதர்களே இல்லை.
அமெரிக்க வர்த்தக செயலாளர் இதற்கு விளக்கமளித்துள்ளார். வர்த்தகத்தில் குறுக்குவழிகளை மூடுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தீவுகள் வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலம் அமெரிக்காவை அடைவதைத் தடுப்பதற்காகவே ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்கிறார். ஆஸ்திரேலியா இதை அவசரமாக எடுக்கப்பட்ட தவறான முடிவு என்கிறது. தொழிலதிபராக இருந்த டிரம்ப்பின் நடவடிக்கை, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை நெறிப்படுத்துவதில் சிரத்தை கொண்டுள்ளது. வரிப் பட்டியலில் எந்தப் பகுதியாவது விலக்கு அளிக்கப்பட்டால் அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பார்கள் என்பது டிரம்ப்பின் பார்வையாக உள்ளது.
هذه القصة من طبعة April 25, 2025 من Dinamani Cuddalore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Cuddalore
Dinamani Cuddalore
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு
பாமகவில் விருப்ப மனு பெறும் கால அவகாசம் டிச.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Cuddalore
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Translate
Change font size

