يحاول ذهب - حر
மீண்டும் அரசியலில் மையம் கொண்ட ரஜினி!
November 27-29, 2024
|Nakkheeran
“ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் விறுவிறுப்பான காட்சிகளை எல்லாம் பார்க்க முடியுது."
-
'ஆமாம்பா, அ.தி.மு.க. நடத்திய ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் ரஜினி உரை நிகழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறாரே?"
'உண்மைதாங்க தலைவரே, சில மாதங்களுக்கு முன் தி.மு.க. நடத்திய அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொண்ட போதே, நாமும் ஒரு விழாவை நடத்தி, அதுக்கு ரஜினியை அழைக்கணும்னு எடப்பாடி தீர்மானிச்சிட்டாராம். அந்த வகையில் முன்னாள் முதல்வரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவை திட்டமிட்டபோதே, நடத்தத் ரஜினிக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாராம். ஆனால் ரஜினி அப்போதே, 'என்னால் விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியுமா? என்று தெரியவில்லை. வர இயலாத சூழலில், நிச்சயம் காணொலிக் காட்சி வழியாக கலந்துகொள்வேன்'னு எடப்பாடிக்கு உறுதி கொடுத்தாராம். அதன்படி வானகரத்தில் 24ஆம் தேதி அ.தி.மு.க. நடத்திய ஜானகி நூற்றாண்டு விழாவில், காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார் ரஜினி. அப்போது, ஜானகி அம்மாளைப் பற்றியும், எம்.ஜி.ஆரைப் பற்றியும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்ட அவர், இரட்டை இலைதான் அ.தி.மு.க.வின் அஸ்திரம். தேர்தல் ஆணையத்தால் அது முடக்கப்பட்ட போது அதனை மீட்டு ஜெயலலிதா விடம் ஒப்படைத்தவர் ஜானகி அம்மாளனு பழைய சம்பவத்தை நினைவு படுத்தினார்."
"தான் அரசியலுக்கு வராதது பற்றியும் அதில் ரஜினி பேசியிருக்கிறாரே?"
ஆமாங்க தலைவரே, ரொம்பவும் அதை நகைச்சுவையாக விவரித்த ரஜினி, 'நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் நிறைய பேர் ஆலோசனை சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டிருந்தா அவ்ளோதான். நிம்மதி, பணம்னு எல்லாத்தையும் இழந்திருக்கணும்'னு சொல்லி, எல்லோரையும் கலகலப்பில் ஆழ்த்தியிருக்கார். இந்த விழாவில் ஜெயலலிதாவோடு திரைப்படத்தில் நடித்த சீனியர் நடிகைகள் சிலரையும் அழைத்து, கௌரவிச்சிருக்காங்க. அதேபோல் இந்த விழாவில் பேசிய எடப்பாடி, 'அ.தி.மு.க. எப்போதெல்லாம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் வெற்றிபெறும். அதேபோல இன்று அ.தி.மு.க.வை எவர் அழிக்க நினைத்தாலும் அது நடக்காது' என்று, கட்சியில் இருக்கும் தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, தனக்கு எதிராகக் கொடி பிடித்து வரும் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர் இந்த விழாவில் அவர் மைக் பிடிக்க விடவில்லை. இது அவர்களை மேலும் டென்சனாக்கியிருக்கிறதாம்."
هذه القصة من طبعة November 27-29, 2024 من Nakkheeran.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
