காரணம், அவர் எல்லாவித யாப்புவகைப் பாடல்களிலும் அவர் புகுந்து விளையாடியிருக்கிறார். நம்மாழ்வாரைச் சிறப்பித்துப் பாடிய கம்பன், திருமங்கையாழ்வார் பாடல்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்று தெரிகிறது.
இன்று நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநரையூரைப் பற்றித் திருமங்கைமன்னன் நூறு பாடல்கள் பாடியிருக்கிறார். அவர் காலத்தில் திருநரையூர், கண்ணுக்கினிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த அழகான ஊராய் இருந்திருக்கிறது.
இயற்கையையும், இறைவனையும் இணைத்துப் பாடுவது பக்திப் பாடல்களின் தனிச் சிறப்பு. ஏனெனில், அவர்கள் இயற்கையையும் இறைவனையும் வெவ்வேறாகக் கருதவில்லை.
திருமங்கையாழ்வாரின் 'பெரிய திருமொழி'யில் ஒரு பாடல்.
ஒளியா வெண்ணைய் உண்டான் என்று
உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி அழுதான் - மென் மலர்மேல்
களியா வண்டுகள் உண்ண
காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே!
திருநரையூரில் எழுந்தருளியுள்ள நம்பி, கிருஷ்ணாவதாரத்தில் குழந்தைக் கண்ணனாக ஆய்ச்சியர் வீடுகளில் கள்ளத்தனமாகப் புகுந்து வெண்ணையைத் திருடி உண்கின்றான். அவன் தாய் யசோதை அவனைக் கயிற்றால் உரலுடன் கட்டிப் போடுகிறாள். அவன் விம்மி விம்மி அழுகிறான்.
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.