நானோ 'எல்லா தடங்கல்களையும் ஒருபடியாகக் கடந்து பயணத்தைத் தொடங்கிவிட்டேன், அப்பாடா!' என பெருமூச்சு விட்டேன். பக்கத்திலிருந்த என் எட்டு வயது மகனின் நெற்றியில் முத்தமிட்டு. “குகன் குஞ்சு, நாங்கள் நாங்கள் இன்னும் பத்து மணித்தியாலத்தில் பாங்கொக் போய் இறங்கிவிடுவோம்.' " "அம்மா அப்போது இரவு ஏழரை மணியாகிவிடுமே?" எனக் கேட்டான்.
"ஓமடா ஆனால் நீ மறந்திட்டியா, சிட்னியில் சூரியன் உதித்து மூன்று மணி நேரத்திற்கு பின்தான் பாங்கொக்கில் சூரியன் உதிக்கும் ஆகையால் மாலை நாலரை மணியாகத்தான் இருக்கும்." என்றேன்.
விமானம் மேலே எழுந்து பறக்கவும் குகன் ஜன்னலின் ஊடாக வெளியே தெரிந்த காட்சிகளைப் இரசித்தபடி அமர்ந்திருந்தான். விமானப் பணிபெண் குகனுக்கு கலரிங் புத்தகமும் பென்சில்களும் கொடுத்தாள். அவன் ஆவலோடு கலர் பண்ணத் தொடங்கவும் என் இருக்கையைச் சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.
என் கடந்த கால வாழ்க்கை மனக்கண் முன் திரைப்படமாக ஓடியது.பன்னிரண்டு வயதில் என் பெற்றோருடன் 1988 ஆம் ஆண்டில் போரினால் பாதிக்கப்பட்டுச் சிதைந்த எமது தாய் நாடான சிறிலங்காவை விட்டு சகல வாய்ப்புகளும் நிறைந்த சிட்னி நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம். இங்கு பள்ளிக்கூடம் போகும் போது மேலே பறக்கும் வானுர்திகளிலிருந்து ஷெல் அடிக்கிறார்கள் என உயிருக்குப் பயந்து பங்கர்களுக்குள் ஓடத் தேவையில்லை. நிம்மதியாகப் படிப்பிலே கவனம் செலுத்தக் கூடியதாவிருந்தது. பள்ளிக்கூடத்தின் இறுதி ஆண்டு பரீட்சையில் உயர்ந்த மார்க்கோடு தேறியதால் எனக்கு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகமும் நிதியும் படிக்க இடம் கிடைத்தது. நான்கு வருட முடிவில் தனிச்சிறப்புடன் தேறியதால் எனக்கு வெளிவிவகாரமும் வர்த்தகமும் துறை இலாகாவில் வேலையும் கிடைத்தது.
அங்கு வேலை செய்யும் போது அந்த இலாகாவின் பரிந்துரையினால் பகுதிநேரமாகச் சர்வகலாசாலையில் படித்து சர்வதேச உறவில் முதுகலைப் பட்டமும் பெற்று அதே இலாகாவில் பதவி உயர்வும் கிடைத்தது.
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 2024 edition of Kanaiyazhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சாமி என்கிற பரசுராமன்
சாமியண்ணாவைக் கடற்கரையில் பார்த்தேன் - என்றான் அண்ணா சிவராமன்.
சுயமரியாதையும் தமிழ் சினிமாவும்
20 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தை கட்டமைத்த சொற்கள் இரண்டு.
நாளிதழ் நாப்கின்
பழைய ஜட்டி இருந்தா கொடுக்கா. அப்படியே பழைய பேப்பர் இருந்தா மடித்து உள்ளே வேண்டும் எனக் புது ஜட்டியையும் கொடுங்க நாப்கினையும் கொடுத்தாள் எனும் வரிகளை வாசிக்கையில் பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது.
அளவுகள்
அதையே நினைச்சிக்கிட்டு இருக்க வேணாம். முதல்ல சாப்பிடுங்க'' ' சண்முகம் ஸார் சோற்றைப் பிசைந்துகொண்டே உட்கார்ந்திருந்தார்.
அர்த்தம்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்று ஒன்று உள்ளதா அப்படி என்றால் அது “ \" என்ன? ?' என்றைக்கு மனிதர்கள் சிந்திக்கும் திறன் பெறத் துவங்கினார்களோ அன்று தொடங்கி இன்று வரை பூமராங் கேள்வியாக இது சுழன்று சுழன்று வருகிறது.
சின்ன மீனும் பெரிய மீனும்
அண்ணே, உங்க பயோடேட்டா வேணுமாம்'ணே! காலையிலிருந்து ரெண்டு \"தரம்கவுருமெண்ட்லருந்து போஃன் பண்ணீட்டாங்க.
எழுதப்படாத வசனங்கள் எனும் நாடக நிகழ்த்துகைப் பண்பும் எம்.ஆர்.ராதாவின் நாடக நிகழ்த்துகைக் குணமும்!
வாழ்க்கையைப் பற்றிப் பேசுதற்கு இன்னமும் விஷயங்கள் சுரந்து கொண்டிருப்பதைப் போலவே, நாடகம் பற்றிப் பேசுதற்கும் இன்னமும் விஷயங்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆயுத பூஜை
இனிமேலும் ஒத்திப்போட முடியாது என்று முணுமுணுத்துக் கொண்டே குமரேசபிள்ளை எழுந்தார்.
சுவர்ணபூமி
சிட்னியின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாங்கொக் செல்லும் தாய்லாந்து ஏர்லைன்ஸ் விமானத்தில் என் மகனும் நானும் ஏறி இருக்கைகளில் அமர்ந்தோம்.