CATEGORIES
Categories
திருமதிகள் தீர்மானிக்கிறார்கள்!
நம்ம டெக்னிக் என்னான்னா முதல் இரண்டு மாதத்தில் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்கா பில்ட் பண்ணிருவோம். அதன் பின்னர் குட்டி குட்டியான விஷயங்கள் பண்ணிகிட்டே இருப்போம். தொடர்ந்து போய்கிட்டிருக்கிற கதை ஒரு பக்கம் இருக்கும். அதில் ஒரு இருபது எபிசோட்கள் வரை போறமாதிரி குட்டியா ஒண்ணு ப்ளான் பண்ணுவோம். ஒவ்வொரு இருபது எபிசோடும் ஒரு படம் மாதிரி இருக்கும். அது முடிஞ்சதும் வேற பிரச்னை ஆரம்பிக்கும். அப்படியே போய்கிட்டே இருக்கும்.
நல்லதொரு ஆரம்பம்!
சென்னை அயப்பாக்கத்தில் இருந்து தி.நகரில் தான் சுகாதாரப் பணியாளராக வேலை பார்க்கும் நிறுவனத்துக்குச் செல்ல பேருந்தில் ஏறுகிறார் ராணி.
முப்பெரும் இயக்கங்களின் அடையாளம்
ஒரு தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்திருந்தார் தோழர் என். சங்கரய்யா. அவரிடம் ஒரு சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்ட 'ஜூனியர் விகடன்' செய்தியாளரை, அப்போது நான் பணி செய்துகொண்டிருந்த தீக்கதிர்' அலுவலகத்தில் சங்கரய்யா தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்றேன்.
சொற்களால் ஆனவன்
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
சிறப்புப் பக்கங்கள் நெடுந் தொடர்களின் உலகில் இருந்து...
வில்லியம் ஷேக்ஸ்பியர் நம்ம சின்னத்திரை சீரியல்கள் பற்றி கவிதை பாடியிருக்கார் தெரியுமா? என்று ஒரு இலக்கியவாதி ராத்திரி நேர ஜமாவின் போது கேட்க சுற்றியிருந்த ரசிகர்கள் யோசிக்க...
சுந்தர் கே. விஜயன் - மாமியார் மருமகள் கதைகளை உடைக்க வேண்டும்!
சுந்தர் கே. விஜயனைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்கள் பற்றிப் பேச முடியாது. இதுவரை சுமார் பதினைந்தாயிரம் எபிசோடுகளுக்கு மேல் இயக்கி இருக்கிறார். சன் டிவியில் வெளியான 'குங்குமம்', ‘ஜன்னல்', 'ஊஞ்சல்', 'அண்ணாமலை', 'நிறங்கள்', 'அலைகள்', 'செல்வி', அரசி' என அவர் இயக்கிய நெடுந்தொடர்களின் பட்டியல் மிக நீளம். அந்திமழைக்காக இவரிடம் பேசியதிலிருந்து.
ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்?
என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாகப்பத்து ஆண்டுகள் ஆகின்றன. 'வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப நல்லா இருக்கு , எப்படி எழுதறீங்க' என்கிற ஆச்சர்யம் ஒருபுறம்... சீரியலா எழுதறீங்க. ஏன் எப்பவும் எல்லோரையும் அழ வைச்சிட்டே இருக்கீங்க...', 'சீரியல்லாம் எப்படித் தான் எழுதறீங்களோ' என்கிற நக்கல் மறுபுறம் என இருவிதமான விமர்சனங்களோடு தான் இந்த பத்து வருடங்கள் கடந்து போயிருக்கின்றன.
முள்ளரும்பு மரங்கள் 1 - இலக்கிய வேர்கள்
வீட்டில் வைத்துக்கொண்டிருக்க முடியாத அளவுக்குத் தொந்தரவு கொடுக்கும் பையனாகத்தான் நான் இருந்திருக்க வேண்டும், மூன்று வயதிருக்கும்போதே ஐந்து வயதாகி விட்டது என்று சொல்லி என்னைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆறாவது படிக்கும்போது எனக்கு ஒன்பது வயது. தொலைவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் ஏதோ ஊரிலிருந்து எங்களூருக்குவந்து சிலகாலம் எங்களுக்குப் பாடம் நடத்தினார் பேரழகியான அந்த ஆசிரியை. அவரது பெயர் நினைவில்லை. ஆனால் பாக்கு மரத்தின் இளம்பாளை போன்ற அவரது தோல் வண்ணமும் வகுப்பறைக்குள்ளே அவர் நுழையும்போது பரவும் மனோரஞ்சிதப் பூவாசமும், ஏதோ குறும்புத்தனத்தை உள்ளடக்கி ஒளிரும் அவரது பளீர் புன்னகையும், அந்த வடிவான மூக்கின் கீழேலேசாக அரும்பியதங்கவண்ண முடியிழைகளும் ஒருபோதும் என்னால் மறக்க முடியாதவை.
ஆக்டோபஸ் ஆசிரியை!
நாய், பூனை, குதிரை, யானை, டால்பின் மனிதர்களுக்கும் இடையேயான என்று எண்ணற்ற உயிரினங்களுக்கும் பிணைப்பை கேள்விப்பட்டிருக்கிறோம். சில சமயங்களில் சிங்கம், புலிகள் கூட அரிதாக மனிதர்களுடன் பழகும் காட்சிகள் உண்டு. ஆனால் கடலில் வாழும் ஆக்டோபஸ், அதனுடைய உலகத்திற்குள் மனிதன் ஒருவனை அனுமதித்து அவனுடன் தொட்டு விளையாடும் நிகழ்வுகள், இதுவரை கேள்விப்படாதவை.
மென்பொருள் அதிபரின் கதி!
கணினியில் புழங்கும் எல்லோருமே கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருளான Mcafee பற்றிக்கேள்விப்பட்டிருப்போம். பயன்படுத்தி இருப்போம். இதை உருவாக்கியவர் பெயர் ஜான் மெக்காபி. அவர் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஸ்பெயினிலுள்ள பார்சிலோனா நகர சிறையில் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இங்கிலாந்தில் பிறந்தவரான மெக்காபி, நாசா, ஜெராக்ஸ், போன்ற நிறுவனங்களில் வேலைபார்த்தவர்.
“கவனித்துத்தான் கற்றுக்கொண்டேன்!
"சினிமாவை நேசித்து, ரசித்துத்தான் இதற்குள் வந்திருக்கின்றேன். சினிமாவிற்குள் வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதம். அதனால், இதை ஒரு கடமையாகவோ, வேலையாகவோ பார்ப்பதில்லை. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துத்தான் எடுப்பேன்!'' என்கிற தேனி ஈஸ்வர், அவதானிப்புமனிதனை எந்தளவிற்கு உயர்த்தும் என்பதற்கு ஓர் அடையாளம். தேடலாலும், தீரா வாசிப்பாலும் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு ஒரு நிகழ்கால நம்பிக்கை.
வாய்ப் புண்ணுடன் வரவேற்ற நல்லபாம்பு!
பணிக்கு சேர்ந்த முதல்நாள் வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு சக்கரவாகனத்தை எடுத்துக்கொண்டு உள்ளே சுற்றி வந்தேன். ஊர்வன வகை விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்தைத் தாண்டுகையில், 'சார்,' என்று அழைத்தவாறு அங்கிருக்கும் பாம்புகளைப் பராமரிக்கும் பெண் உதவியாளர் வந்தார். அருகில் வந்த பிறகுதான் அவர் கையைப் பார்த்தேன் . நீளமான நாகப்பாம்பு . பார்த்த உடன் பகீர் என்றது
ரவநேரம்
அழைப்பு மணி அடிக்கிற சத்தம் ழைப்பு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. படுத்துக்கொண்டிருந்த காமாட்சி எழுந்து வந்து கதவைத் திறந்தாள். வாசலில் செல்லமுத்து நின்றுகொண்டிருந்தார். ஏன் இவ்வளவு லேட்டு? என்று கேட்டாள்.
எப்படிச் சம்பாதிக்கலாம் பணத்தை?
படித்து, வேலைக்குப் போய்க் கூட மிகப் என்று செய்து காட்டிக்கொண்டிருப்பவர், 49 வயதாகும் நம் தமிழர், சுந்தர் பிச்சை.
புன்னகைக்கும் பணம்!
புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில் தீது உற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்? காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே. இந்த வரிகள், செல்வந்தர் பட்டினத்தாரை துறவியாக்கின.
கடன் அன்பை முறிக்குமா?
சில மாதங்களுக்கு முன் ஒரு மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவில் நண்பருக்கு பேஸ்புக் மெசேஞ்சரில் ஒரு மெசேஜ் வருகிறது. அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பேஸ்புக் நண்பரான முருகேசன் அனுப்பி இருக்கிறார். பேஸ்புக் மூலமாக மட்டுமே அறியப்பட்டவர் இந்த நண்பர்.
அதிரடி ஷெபாலி!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய நட்சத்திர வீராங்கனையான ஷெபாலி வர்மா இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு அரை சதங்களை விளாசி ஆட்ட நாயகி ஆகியுள்ளார்.
பெறாத பிள்ளை!
எழுபது காலங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரி வகுப்புகளில், பெண்கள் பயில்வதென்பதும், குறிஞ்சிப்பூ மலர்வதென்பதும் ஒன்றுதான். எங்களது வகுப்பறையும் அப்படித்தான். எங்கள் வகுப்பில் பயின்ற மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே பெண்கள்! நான் படித்த சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலேயே கால்நடை ஈனியல் துறையில் இப்போதுதான் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தது போலுள்ளது, ஆனால் கிட்டத்தட்ட முப்பத்து மூன்றாண்டுகள் கடந்தோடிவிட்டன.
வதந்தி எனும் அரசியல் ஆயுதம்!
காபி அருந்த எழும்பூர் அசோகா உணவகத்தில் அமர்ந்திருந்தோம். நம்முடன் இரு மூத்த பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஒருவர் அடித்துச் சொன்னார்.
ஒ... டயானா!
பிரிட்டன் முன்னாள் இளவரசி டயானாவைப் பற்றி அவர் இறந்து 23 ஆண்டுகள் ஆகியும் செய்திகளுக்குக் குறைவில்லை. தற்போதைய செய்தி அவர் 1995இல் பிபிசிக்கு கொடுத்த நேர்காணலின் பின்னணி பற்றியது.
பன்றிக்கு நன்றி சொல்லி!
"சா.... சாப்பிடுறீங்களா?" கேட்ட மங்கள் பிரசாத்துக்கு முப்பது வயது இருக்கலாம். வயது தெரியவில்லை. குளிருக்கு கிழிந்த அழுக்கான ஸ்வெட்டர் அணிந்திருந்தான். பேண்டில் பல இடங்களில் கிழிசல். ஊசி நூல் கொண்டு தைத்ததன் தடம் தெரிந்தது. காலில் நைந்து போயிருந்த செருப்பு.
கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்!
பலர் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று அவரைச் சொல்லுவார்கள். இன்னும் பேராசிரிய பெருமக்கள் சிலர் 'வட்டார வழக்கு படைப்பாளி' என்று சொல்லுவார்கள். அவரை ஒரு கட்டுக்குள், ஒரு சிமிழுக்குள் ஏன் அடைக்கவேண்டும்? நீண்ட காலமாக என் மனதுக்குள் இது பற்றிய எண்ணம் உண்டு.
கிசுகிசுவின் உளவியல்
மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே அவன் புரளி பேச ஆரம்பித்து இருப்பான். பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரம் வருடங்களாக மனிதன் செய்து கொண்டிருப்பதுதான். இதை எதற்காகச் செய்கிறான்? இதன் பின்னால் என்ன உளவியல் இருக்கிறது?
நான் கல்யாணம் செய்து கொண்டதே மொய்ப்பணத்தை வைத்து சங்கத்துக்கு உறுப்பினர் தொகை கட்டத்தான்!
கலை இயக்குநர் ராமலிங்கம்
நான்கு மலையாளப்படமும் ‘நச்'சென்ற நவம்பர் ஸ்டோரியும்
இந்த மாதம் தியேட்டர்கள் இல்லாததால் Act" சில மலையாளப் படங்கள் பார்த்தேன். அவற்றின் அப்டேட்ஸ் இங்கே.
இலக்கிய உலகில் ததும்பும் கதை!
உலகம் கதைகளால் ஆனது என்ற வரையறையைப் போலவே தீவிரமான சிறுபத்திரிகை உலகமும் கதைகளாலும் கிசுகிசுக்களாலும் புறணிகளாலும் நிரம்பியது தான்.
சரியும் சீட்டுக்கட்டுகளா சிறுகட்சிகள்?
உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடைய தவறான வழி நடத்தலும்தான் காரணம். ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்துவிட்டது!
கொள்ளை நோயின் மறுபக்கம்!
தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜாக்கி ஆக்மார்ட் என்பவர், உலகமறிந்த சமூக செயற்பாட்டாளர். 1997 இல் அவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டார்.
அவருக்கு மொழி ஒரு சவாலாக இருக்கவே இல்லை!
இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டு விழாவை தான் உயிரோடு இருக்கையிலேயே சந்திக்க இருந்தார். கி.ராஜநாராயணன். அதற்குள் இயற்கை அவரைக் கடத்திக் கொண்டது.
மக்களின் தீர்ப்பில் மலர்ந்த சூரியன்
தனது மாநிலத்திற்கு வெளியே படித்து, பிடித்தமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தார், அந்த இளைஞர். அரசியலுக்கும் அவருக்கு பெரிதாக சம்பந்தம் கிடையாது. அவரது அப்பா அரசியல்வாதி, முதல்வராக இருந்திருக்கிறார். இரண்டு முறை மத்திய அமைச்ச ராக இருந்திருக்கிறார்.