Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

தெங்கு உற்பத்தியை ஊக்குவிக்க வடக்கில் முக்கோண வலயம்

Virakesari Daily

|

September 03, 2025

ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் GUAV

- நிவேதா அரிச்சந்திரன்

தெங்கு உற்பத்தியை ஊக்குவிக்க வடக்கில் முக்கோண வலயம்

இலங்கையில் தற்போது தேங்காய்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளதுடன் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவை விட அதிகளவு விற்கப்படுகிறது.

இந்நிலைமையானது கீழ்த்தட்டு மக்கள் மத்தியில் பாரிய நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரிசையுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேங்காய்க்கு மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளதாக இந்த அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமானது பொதுமக்கள் மத்தியிலும் மிகப் பாரியதொரு அதிருப்தியை தோற்றுவித்திருந்தது.

இதற்கிடையில் இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாக தற்போது அரசாங்கம் தெங்கு உற்பத்தியை ஊக்குவிக்கும் பாரிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'கற்பகத்தரு, நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா நேற்று ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர்களில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு 2027ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் ஏக்கர்களாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்துக்கு கொண்டு சென்று செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்து அந்நிய செலாவணியை அதிகரிக்கவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் பருத்தித்துறை, சிலாவத்துறை மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களையும் இணைத்து ஆரம்பிக்கப்படும் வடக்கு தென்னை முக்கோண வலயமானது யாழ் 2025ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர்களில் தெங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு 2027ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரம் ஏக்கர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கியவாறு செயல்படுத்தப்படுகின்றது.

Virakesari Daily'den DAHA FAZLA HİKAYE

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size