Denemek ALTIN - Özgür

இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு'

Virakesari Daily

|

August 05, 2025

2019ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப்பை பற்றி பிரதமர் நரேந்திர மோடி 'அப்கி பார் டிரம்ப் சர்கார்' என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு'

அடுத்த வருடம் டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது, அவரை வரவேற்க நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி ஆமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆய்வாளர்கள் இது இரு தலைவர்கள் இடையே உறவு வலுவடைவதன் அடையாளமாக பார்த்தனர். 2024ஆம் ஆண்டில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார், டிரம்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். ஊடகங்கள் இந்திய - அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் இந்த இருத்தலைவர்கள் இடையிலான உறவின் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கின. ஆனால், இந்த இரு தலைவர்கள் இடையிலான உறவு கடந்த ஆறு மாதங்களில் முன்பு இருந்தது போல் இல்லை எனத் தோன்றுகிறது. ஜனாதிபதி ஆன பிறகு டிரம்ப் பல நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என அறிவித்தார். மற்ற நாடுகளின் பொருட்கள் அமெரிக்கா சந்தைக்கு மலிவான விலையில் வருவதாகவும், பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாகவும் டிரம்ப் சொல்கிறார்.

ஆனால், வரிகளை அறிவித்த பின்னர் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள இந்த நாடுகளுக்கு டிரம்ப் 90 நாள் அவகாசம் அளித்தார். ஆனால் ஜூலை 30ஆம் தேதி இந்தியா மீது 25 வீத வரியை டிரம்ப் அறிவித்தார். இதைத் தவிர, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிப்பது குறித்து டிரம்ப் பேசினார். இந்தியா மீதான வரியை அறிவித்த பின்னர், அமெரிக்கா பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை மேம்படுத்துவது குறித்து அந்த நாட்டுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இந்தியா அமெரிக்கா உறவுகளுடன், இந்தியாவின் வர்த்தக உறவுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகின்றன. ரஷ்யாவுடனான இந்தியாவின் எரிசக்தி உறவுகள் எவ்வளவு முக்கியமானவை? இந்தியாவுக்கு வர்த்தக வரிகள் எவ்வளவு பாதகமானவை?

இந்தியா எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்? பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தின் மீது இதன் விளைவு என்னவாக இருக்கும்? எண்ணெய் இருப்பு பற்றி பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன பொருள்? இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவின் போக்கை எப்படிப் பார்க்கவேண்டும்? பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான, 'தி லென்ஸ்'ல் கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்திப்பிரிவு இயக்குநர் முகேஷ் ஷர்மா இந்தக் கேள்விகள் குறித்துப் பேசினார்.

Virakesari Daily'den DAHA FAZLA HİKAYE

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size