அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்னும் சமூகப் புரட்சியை செய்வது ‘திராவிட மாடல்’ அரசின் தனித்தன்மையாகும்
Viduthalai
|june 1,2025
மற்ற மற்ற சாதனைகளைச் செய்வதைக் காட்டிலும், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான திட்டத்தை செயல்படுத்துவது புரட்சிகரமானது. இது திமுக நடத்தும் 'திராவிட மாடல்' அரசின் சிறப்பான சாதனை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
-
நேற்று (31.5.2025) வேலூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
தந்தை பெரியார் அவர்களால் 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘குடிஅரசு' என்ற சமூகப் புரட்சி ஏட்டிற்கும், 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமான சமுதாய இயக்கத்திற்கும் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடெங்கும் சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் எல்லாம் ஒன்றுதான்! அந்த வகையில்தான் திராவிடர்கழகத்தினுடைய கொள்கைகள், சுயமரியாதை இயக்கத்தினுடைய லட்சியங்கள் எல்லாம் பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் வளர்ந்து, இன்றைக்குத் திராவிட மாடல் ஆட்சியாக இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய காலத்தில் அது சிறப்பான அளவிற்குப் பல்வேறு சாதனைகளையெல்லாம் செய்து வருகிறது.
அதன் காரணமாகத்தான், சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பெற்ற அதே ஆண்டில் தொடங்கப் பெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கம் - முழுக்க முழுக்க ஜாதிய வருணாசிரம தர்ம தத்துவத்தையும், ஸநாதனத் தத்துவத்தையும் காப்பாற்றவேண்டும் என்பதற்காக அவர்கள் முழு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, இரு வகையான கருத்தியல் போர் இங்கே நடைபெறுகின்றது.
இரண்டு விதமான கருத்துப்போர்!
தோற்றத்தில் அரசியலாகக் காணப்பட்டாலும், முழுக்க முழுக்க இரண்டு வகையான கருத்தியல் போர்கள்தான் இந்த இயக்கங்கள் மூலமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில்தான், மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காக சுயமரியாதை இயக்கத்தினுடைய அடித்தளம், அடிக்கட்டுமானம் வலுவோடு இருக்கிறது; அந்த அடிக்கட்டுமானம் குலையக்கூடாது. அதை எப்படியாவது சிதைக்கவேண்டும் என்பதற்காகத்தான், கூலிப் படைகளையும், மற்றவர்களையும் அழைத்து, பெரியாரின் பிம்பத்தை உடைக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள்.
அதற்கு இங்கே இடமில்லை என்று காட்டுவதற்காகத்தான் நாடு முழுவதும் சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டைத் தாண்டி, சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பரவியிருக்கின்றன.
Bu hikaye Viduthalai dergisinin june 1,2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Viduthalai'den DAHA FAZLA HİKAYE
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

