Denemek ALTIN - Özgür

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

Dinamani Vellore

|

August 26, 2025

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

- பழ.கருப்பையா

ண்மையில் 'பாதை மாறாப் பயணம்' என்று முன்னாள் மந்திரி ஒருவர் பேசினார்! 'நகம் முளைத்த நாளாக நான் ஒரு கட்சியிலேயே இருக்கிறேன்' என்று தன்னுடைய ஒரே பெருந்தகுதியாக, இடையறாமல் இதை இந்நாள் மந்திரி ஒருவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்!

பாதை மாறாப் பயணங்களின் அடிநோக்கம் 'இலாபகரமானது' என்பதுதான்! இத்தகைய நிலையில் எவன்தான் கட்சி மாறுவான்? கட்சி மாறினால் ஈவு போய்விடாதா? ஒரு கட்சி சிலருக்கு மட்டும் இத்தகைய வாய்ப்புகளைக் கொடுத்து விட்டு, பிறரைத் தெருவிலே விட்டு விட்டால், அந்தக் கட்சியில் எவனும் தொடர்ந்து இருக்க மாட்டான்! ஆட்சிக்கு வரும்போது சுரண்டல் பரவலாக்கப்பட்டு விடுவதுதான் இந்தக் கட்சிகளின் ஏற்றத்திற்கான ஒரே அடிப்படை!

மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பஞ்சாயத்து, கூட்டுறவு நிறுவனங்கள்; கோயில்களில் அறங்காவலர்கள்; சாலை போடல், ஏரி தூர்வாரல் போன்றவற்றிற்கான ஒப்பந்தங்கள்; அரசு நிறுவனங்களில் வேலை பெறல்; வேலைபெறத் தகுதி இல்லை எனில், தகுதியுடையவனுக்குப் பரிந்துரைத்து அதற்குப் பணம் பெறல்; இன்னும் எண்ணத்தொலையாச் சலுகைகள், வசதிகள்!

இவைபோக கனிமவளச் சுரண்டல்; மலைகளைச் சல்லிகளாக்குவதில், கிரானைட்டாக ஏற்றுமதி செய்வதில் சுரண்டல்; வன வளச் சுரண்டல்; ஆற்றுமணல் சுரண்டல்! இவற்றிற்கிடையே மக்களுக்கும் சில கஞ்சிப் பருக்கைகள்!

இவற்றை அடைய முடியாத அடிமட்டத் தொண்டர்களுக்கு ஊர்வலம் போனால் குவார்ட்டர் மற்றும் பிரியாணி; ஒரு நாள் சம்பளம்; கூட்டம் கேட்க வருவதற்கு தையல் மிசின், குடம், சேலை, வேட்டி என்று அடிநிலைத் தொண்டர்களுக்கும் பங்கிடல்! இந்தியாவிலேயே பெரிய கார்ப்பரேட் தொழில் அரசியல் கட்சி நடத்துவதுதான்! வங்கத்தில் நடப்பது 'மமதா மாடல்' தமிழ்நாட்டில் நடப்பது 'திராவிட மாடல்'! பெயர்தான் வித்தியாசம்.

காந்திதான் அரங்குக்குள் இருந்த அரசியலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தவர்! அவர் காலத்தில் காங்கிரசில் மாவட்டத்திற்கு வெறும் ஐநூறு, ஆயிரம் பேர் தான் இருப்பார்கள்! தொண்டும், சிறை புகலும், பொதுவாழ்வின் நோக்கமாக இருந்ததால், வெட்டித்தனமானவனுக்கெல்லாம் கட்சியில் என்ன வேலை?

இன்றைக்குக் கட்சிகளில் எழுபது, எண்பது இலட்சம் பேர் உறுப்பினராக இருப்பதற்குக் காரணம், கட்சி ஒரு 'தொழிலாகி' விட்டதுதான்! இதைத் தொழிலாக்கியது கருணாநிதி! மனம் தடித்தவர்கள் அரசியலுக்குள் நுழைகின்ற காலம் தொடங்கியது!

Dinamani Vellore

Bu hikaye Dinamani Vellore dergisinin August 26, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Vellore

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Vellore

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Vellore

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Vellore

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Vellore

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size