Denemek ALTIN - Özgür
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
Dinamani Tiruvarur
|June 28, 2026
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
ஏனைய ஆழ்வார்களுக்கு முந்தித் தோன்றிய கால முதன்மையாலும் திவ்வியப்பிரபந்தங்களை முதலிற்பாடி அவர்களுக்கு வழிகாட்டிய கருத்து முதன்மையினாலும் முதலாழ்வார்கள் என்னும் பெயர் ஏற்பட்டது இவர்களுக்கு.
இம்மூவரையும் 'நற்றமிழர்' என்றே கொண்டாடுகிறது ஆறாயிரப்படி குருபரம்பரை. கவி ஞானியராகிய இம்மூவரின் திருவந்தாதிகளும் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்னும் பெயரில் நாதமுனிகள் தொகுத்த நாலாயிரத்தில், இயற்பா ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. இவை மூன்றும் தனித்தனி நூறு பாசுரங்கள் கொண்டவை. 'நாரணற்கு ஏற்றிய ஞானச் சுடர் விளக்குகளாய் போற்றப் பெறும் இப்பனுவல்கள் சமயமரபிலும் தமிழ் இலக்கியப் பரப்பிலும் ஒருசேர ஒளிவீசுகிற சிறப்புமிக்கவை.
இம்மூவருள் ஒருவரான பூதத்தாழ்வார் தம்முடைய இரண்டாம் திருவந்தாதியில் 74-ஆம் பாசுரத்தில்,
யானே தவம் செய்தேன்; ஏழ்பிறப்பும் எப்பொழுதும் யானே தவம் உடையேன் எம்பெருமான்! யானே இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன் பெருந்தமிழன் நல்லேன் பெரிது
என்று பாடுகிறார்.
தம்முடைய வாக்கு இறைவன் புகழ் பாடவே பயன்பட்டதனால், 'யானே தவம் செய்தேன்' என்றும் 'யானே தவம் உடையேன்' என்றும் எக்களிப்புக் கொள்கிறார் ஆழ்வார். 'சிறந்த தமிழ்மொழியினாலாகிய நல்ல தமிழ்மாலைகளை உன்னுடைய இணையடிகளுக்கே சூட்டினேன்; ஆதலின் பெருந்தமிழனும் நானே; உனக்குப் பெரிதும் நல்லனாயிருப்பவனும் நானே' என்கிறார்.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin June 28, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Tiruvarur
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruvarur
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Listen
Translate
Change font size
