உயர் கல்வியில் முந்தும் இந்தியா!
Dinamani Tiruvarur
|July 05, 2025
உயர் கல்வியின் வெற்றி, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இதனால், அந்த நாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் சென்றவர்களும், வாழ்வாதாரங்களுக்காக சென்றவர்களும் உயிருக்கு அச்சமின்றி, தங்கள் உடைமைகளை இழந்து பெரும் பயத்துடனும், கவலைகளுடனும் தங்களின் தாய் நாடு திரும்பி வருகின்றனர்.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. தன் திறமைகளை உணர்ந்து, அதை மெருகேற்றி, குடத்தில் இருக்கிற விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய், தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒருவருக்கு உயர் கல்வி அவசியமாகிறது. தான் சார்ந்த துறையில் யாரும் தொடாத உயரத்தைத் தொட்டு முன்மாதிரியாக விளங்கும் வழிகாட்டும் வாழ்க்கை அமைய சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்கின்றனர்.
உக்ரைன் - ரஷியா இடையே 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய போரின் போது அங்கு உயர் கல்வி பயின்ற வந்த மாணவர்கள் சுமார் 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு இந்தியா அழைத்துவரப்பட்டனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பு போர் காரணமாக இஸ்ரேலில் 1,200-லிருந்து 1500 மருத்துவ மாணவர்களும், இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 1,500-லிருந்து 2,000 மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம், அங்கு மருத்துவப் படிப்புகளுக்கு எளிதாக இடம் கிடைப்பதுடன், இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவேயாகும்.
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும், சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இது பாரீஸ் நகரத்தில் வாழும் மக்களைவிட மிகவும் அதிகம்.
சுமார் 90,000 மருத்துவ இடங்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் தகுதி பெறுகின்றனர். இதில் தனியார் கல்லூரிகளில் சுமார் 20,000 மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஒதுக்கீடு ஆகியனவும் அடங்கும். இதனால், லட்சக்கணக்கானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பண வசதியின்றி எங்கும் சேர முடியாத காரணத்தால், அவர்கள் உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிக்கின்றனர்.
Bu hikaye Dinamani Tiruvarur dergisinin July 05, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvarur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvarur
ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகிவிட்டது
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகி விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min
January 02, 2026
Dinamani Tiruvarur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Tiruvarur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Tiruvarur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Tiruvarur
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது
வேதாரண்யம் அருகே கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.
1 min
January 02, 2026
Dinamani Tiruvarur
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Tiruvarur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Tiruvarur
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Tiruvarur
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Tiruvarur
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Translate
Change font size

