Denemek ALTIN - Özgür
ஒருமனதாக தீர்மானம் தேவை!
Dinamani Tiruvallur
|May 20, 2025
பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட ‘சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.
அதோடு, இது விஷயத்தில் நமது முப்படைகளும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அவர் அனுமதியும் அளித்தார். இதையடுத்து, நமது ராணுவத்தினர் நீண்ட ஆலோசனைகள், திட்டமிடலுக்குப் பிறகு, அண்மையில் நடத்திய அதிதுல்லியத் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த ராணுவ நடவடிக்கையில் முக்கிய பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் மிகவும் கட்டுக்கோப்பாக பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக பெரும் ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து ஆளில்லா ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகளைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin May 20, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Tiruvallur
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Tiruvallur
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Tiruvallur
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Tiruvallur
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Translate
Change font size

