Denemek ALTIN - Özgür
விண்வெளி ஆய்வில் இந்தியா!
Dinamani Tirunelveli
|August 23, 2025
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கிய இடம் இனிமேல் 'சிவசக்தி முனை' என்றழைக்கப்படும்; சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாகக் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று, சந்திரயான்-3 விக்ரம் தரை இறங்கு வாகனம் (லேண்டர்), பிரக்யான் நிலவு ஊர்தி (ரோவர்) ஆகியவற்றை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு, நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என இந்தியா பெயர் பெற்றது.
இந்த சாதனையை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 23-ஆம் தேதியை இந்தியாவின் 'தேசிய விண்வெளி தினம்' என்று அறிவித்தார்.
இந்த நாள், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தொழில் செய்ய ஊக்குவிக்கும் ஒருதளமாகவும், விண் வெளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத் தையும், இந்தியாவின் பெருமையை விண் ணில் நிலைநாட்டிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இரண்டாவது தேசிய விண்வெளி தினம் 23.08.2025 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
டாக்டர் விக்ரம் சாராபாயின் தலைமையி ல், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவை 23.02.1962 அன்று அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு நிறுவியதில் இருந்து இந்தியாவின் விண் வெளிப் பயணம் தொடங்கியது. இது 1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, தேசிய வளர்ச்சிக்கு விண்வெளி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக் கத்துடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது.
1963-ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள தும்பாவில் இருந்து அமெரிக்காவின் நைக் அப்பாச்சி சோதனை ராக்கெட்டை ஏவி யது இஸ்ரோ. அந்த கிராமம் 'தும்பா பூமத் திய ரேகை சமச்சீர் ராக்கெட் ஏவுதளம்' என்றழைக்கப்படும் தொடக்கம் பெற்றது. பின்னர், விக்ரம் சாராபாய் நினைவாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையமாக மாற்றம் பெற்றது.
Bu hikaye Dinamani Tirunelveli dergisinin August 23, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size