Denemek ALTIN - Özgür

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Tirunelveli

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால் களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர்.

இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.

Dinamani Tirunelveli

Bu hikaye Dinamani Tirunelveli dergisinin August 07, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size