Denemek ALTIN - Özgür
காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்
Dinamani Tiruchy
|October 12, 2025
தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நாடக உலகின் தந்தையென்று போற்றப்படுகின்ற சங்கரதாஸ், திரைப்படத்துக்கு முதலில் பாடல் எழுதிய மதுர பாஸ்கரதாஸ், பி.யு.சின்னப்பா நடித்த ஆரிய மாலா, ஜெகதலப்பிரதாபன் போன்ற படங்களுக்குக் கதை வசனம் எழுதியவரும், எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் ‘உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா' என்ற பாடலை எழுதியவருமான கவி லட்சுமண தாஸ் என்று பலர் இருந்திருக்கிறார்கள். ‘கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ வாழ்ந்தாலும் உடலுக்குள்ளே மாரன் உதயமாவது திண்ணம்' என்று அந்தக் கால பூலோக ரம்பை படத்தில் பாடல் எழுதிய புதுக்கம்பன் பூமிபால தாஸ்.
1951-இல் வெளிவந்த சிங்காரி என்ற படத்தில் ‘ஒருசாண் வயிறே இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா?' என்று பாடல் எழுதிய தஞ்சை ராமையா தாஸ், உலகத்தில் எவரும் எழுதாத அளவில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ் சாதனை படைத்தவரும், ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதியவரும், தான் வசனம் எழுதிய நூற்றுக்கணக்கான மொழிமாற்றுப் படங்களில் 55 படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்தவருமான வசன கர்த்தா ஆரூர்தாஸ், ஆகியோரும் இருந்தார்கள்.
பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ், பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ், தொழில் அதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ், அரசியல் தலைவர்களில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோரும் பிரபலமானவர்கள்.
அதுபோல், தாசன் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் பாரதிதாசன், கண்ணதாசன், வாணிதாசன், கம்பதாசன், சுப்புரத்தின தாசன் என்று பெயர் வைத்துக் கொண்ட சுரதா ஆகியோர் புகழ்பெற்றவர்கள். இதில் சுரதா உவமைக் கவிஞர் என்று புகழ் பெற்றவர். அப்படிப்பட்டவரே புதிய உவமைகளில், புதிய சிந்தனைகளில், புதிய கற்பனைகளில் கம்பதாசன் முதலிடத்தில் இருக்கும் சிறப்புக்குரியவர் என்று பாராட்டியிருக்கிறார். அன்றைய காலத்தில் இந்தியா முழுதும் அறிந்த ஒரே தமிழ்க் கவிஞர் கம்பதாசன்தான் என்றும் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் கண்ணதாசன் சகாப்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலை.
கிளியின் சிவந்த மூக்கிற்கு பச்சை மிளகாய்ப் பழத்தை பாரதிதாசன் உவமை சொல்லியிருப்பார். 'வெற்றிலை போடாமலே வாய்சிவந்த பச்சைப் பசுங்கிளிகள்' என்று பாகவதர் நடித்த அமரகவி படத்தில் எழுதியிருப்பார் சுரதா.
Bu hikaye Dinamani Tiruchy dergisinin October 12, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruchy'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruchy
காலத்தில் கரைந்துவிட்ட கம்பதாசன்
தாஸ் என்றாலும் தாசன் என்றாலும் பொருள் ஒன்றுதான். இலக்கியத்தில் நாம் முதன்முதல் அறியக்கூடிய தாஸ் வடமொழியில் பல காவியங்களை எழுதிய மகாகவி காளிதாஸ். இந்தியில் இராமாயணம் எழுதிய துளசிதாஸ், கன்னடத்தில் புரந்தரதாஸ், ஹிந்தியில் கபீர்தாஸ், என்று பலர் இருந்திருக்கிறார்கள்.
3 mins
October 12, 2025
Dinamani Tiruchy
தீபாவளி ட்ரெய்லர்
வருடா வருடம், பெரிய பண்டிகைகள் அல்லது விடுமுறை நாள்களைக் குறிவைத்து வரிசையாகப் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடத் தொடக்கத்திலேயே, பெரிய நடிகர்களின் படங்கள் சில வெளியாகி விட்டன. இருப்பினும், இந்த வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய சில படங்கள் வெளியாக லைனில் ரெடியாக காத்து நிற்கின்றன. வரும் தீபாவளிக்கு எந்தெந்தப் படங்கள் வெளியாகும் என்பதை இங்கு பார்ப்போம்.
2 mins
October 12, 2025
Dinamani Tiruchy
கோலிவுட் ஸ்டூடியோ!
நட்சத்திரங்களின் ரீயூனியன்!
1 min
October 12, 2025
Dinamani Tiruchy
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,996 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,996 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruchy
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
2 mins
October 12, 2025
Dinamani Tiruchy
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 mins
October 12, 2025

Dinamani Tiruchy
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகத்தில் நிகழாண்டில் 16,546 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு, உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
1 mins
October 12, 2025
Dinamani Tiruchy
வள்ளலாரை வணங்கிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வட சென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறி யிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர் பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
1 min
October 12, 2025

Dinamani Tiruchy
தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!
ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.
1 mins
October 12, 2025

Dinamani Tiruchy
காலம் பெற உய்யப் போமின்
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.
2 mins
October 12, 2025
Translate
Change font size