'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!
Dinamani Thoothukudi
|October 24, 2025
பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 18-30 வயதுடையோரில் சுமார் 78% பேர் தினமும் குறைந்தது ஒரு முறையாவது 'ரீல்ஸ்' பார்ப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட தமிழக இளைஞர்கள் தினசரி 1.5 மணி முதல் 2 மணி நேரம் 'ரீல்ஸ்' காணொலிகளில் செலவிடுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பதிவேற்றப்படும் 'ரீல்ஸ்கள்' பார்க்கப்படும்போதும், விரும்பப்படும் போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மூளையின் 'டோப்பமைன்' விளைவு அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணர்வு; மற்றவர்களைவிட குறைவான பின்தொடர்பவர்கள் (ஃபாலோயர்ஸ்) இருக்கும் காரணத்தால் அதிகமான 'ரீல்ஸ்' காணொலிகளைப் பதிவேற்றம் செய்யும் தன் நிலை அறியாத ஒப்பீட்டு மனநிலை; வேலை, கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக 'ரீல்ஸ்' காணொலிகளைப் பார்க்கும் பழக்கம் ஏற்படுத்தும் எதார்த்தத்திலிருந்து தப்பிக்கும் மனநிலை; குறுகிய காலத்தில் காட்சிகள், பாடல்கள், சம்பவங்கள் கொண்ட சுவாரஸ்யமான செய்திகள் ஊக்குவிக்கும் நூதன மற்றும் வேகமான மூளைச் செயல்பாடு; சமூக ஊடகங்களைக் கொண்டு சுய மதிப்பீடு செய்து கொள்ளச் செய்யும் புகழின் மீதான வெறி போன்ற உளவியல் காரணங்களால் 'ரீல்ஸ்' காணொலிகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளன.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin October 24, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
1 mins
December 20, 2025
Dinamani Thoothukudi
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு
நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
December 20, 2025
Dinamani Thoothukudi
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Listen
Translate
Change font size

