Denemek ALTIN - Özgür
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு
Dinamani Thoothukudi
|July 31, 2025
வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னர் நாடியது ஏன்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
-
புது தில்லி, ஜூலை 30: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னர் நாடியது ஏன்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
மேலும், 'நீதிபதி வர்மா விசாரணைக் குழு முன் ஆஜரானது ஏன்? என்று மீண்டும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார்.
Bu hikaye Dinamani Thoothukudi dergisinin July 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Thoothukudi'den DAHA FAZLA HİKAYE
Dinamani Thoothukudi
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் தோல்வி
விருதுநகர் பேரவைத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராகப் போட்டியிட்ட தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜயபிரபாகரன் 9,391 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!
200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
தருமபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி வெற்றி
தருமபுரி மாவட்டம் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
98,110 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி கே. பழனிசாமி வெற்றி
எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரைவிட 98,110 வாக்குகள் கூடுதலாக பெற்று அமோக வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Thoothukudi
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Translate
Change font size
