Denemek ALTIN - Özgür
ஓய்வுக்குப் பிறகும் உற்சாகம் !
Dinamani Salem
|September 23, 2025
பணியிலிருந்து ஓய்வு என்பது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டது. பலருக்கு, அது வாழ்க்கையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதற்கான நேரம். எனினும், ஓய்வு ஒரு புறம் அமைதியைத் தந்தாலும், மறுபுறம் சிலருக்கு உணர்ச்சிபூர்வமான சவால்களைக் கொண்டுவரக்கூடும். வேலை செய்த காலத்தில் இருந்த அடையாளம், தனிமை மற்றும் எதிர்காலம் குறித்த பயம் போன்ற கவலைகள் அதனால் உருவாகலாம்.
ஆனால், இந்தக் கவலைகளைப் புறந்தள்ளி, ஓய்வு என்பது நம்மோடு மீண்டும் இணைந்துகொள்வதற்கும், புதிய ஆர்வங்களை ஆராய்ந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஓய்வு என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு புதிய பாதை, புதிய இலக்குகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஒரு தொடக்கம். கடலூரைச் சேர்ந்த 72 வயதான செல்வமணியின் வாழ்க்கை, விருப்பத்துக்கும் வளர்ச்சிக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நமக்கு உணர்த்துகிறது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், அறிவைத் தேடும் தனது ஆர்வத்துக்கு அவர் ஓய்வு கொடுக்கவில்லை. அண்மையில் பல் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ள இவர், ஓய்வு என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதை தனது வாழ்வின் மூலம் மெய்ப்பிக்கிறார்.
செல்வமணி தனது மகள்களுக்கு திருமணமான பிறகு, தனது நீண்ட நாள் கனவான படிப்பைத் தொடங்கினார். அவர் தினமும் 50 கி.மீ. பயணம் செய்து கல்லூரிக்குச் செல்கிறார். இது அவருடைய விடாமுயற்சியின் ஒரு சான்று. இந்த வயதிலும், தன் நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கவனித்துக்கொண்டே படிக்கும் அவரது செயல், அறிவுக்கும் ஆர்வத்துக்கும் வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நமக்கு உணர்த்துகிறது.
Bu hikaye Dinamani Salem dergisinin September 23, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE
Dinamani Salem
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம்
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என நேபாள சுற்றுலா வாரியம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Salem
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Salem
காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
May 15, 2026
Dinamani Salem
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Salem
உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்
இந்தியா வலியுறுத்தல்
2 mins
May 15, 2026
Dinamani Salem
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Salem
தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படுவது அவசியம் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Salem
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Salem
வெற்றி அவசியம்: லக்னௌவை இன்று சந்திக்கிறது சென்னை
ஐபிஎல் போட்டியின் 59-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னெௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 15) மோதுகின்றன.
1 min
May 15, 2026
Translate
Change font size
