Denemek ALTIN - Özgür
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...
Dinamani Salem
|August 22, 2025
மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஆக. 21: 'அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?' என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத்தலைவர் கடந்த மே மாதம் அனுப்பிய தெளிவுரை கோரும் கடிதத்தில் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். அக்கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு அனுமதித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்றாம் நாளாக வியாழக்கிழமையும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா, 'ஒரு குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கத்தக்க ஒரு வழக்கில் நீதிமன்ற விசாரணை ஏழு ஆண்டுகள் கடந்து நடக்கிறது. உடனே குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த வழக்கில் தாமே தீர்ப்பளித்து குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியுமா?
அந்தந்த அரசியல்சாசன அமைப்புகளுக்குரிய அதிகாரங்கள் தெளிவாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவை தங்களுக்குரிய கடமையை வரம்புக்குள்பட்டு ஆற்ற வேண்டும்' என்று வாதிட்டார்.
அவரது வாதத்துடன் உடன்படாத தலைமை நீதிபதி கவாய், நீதிபதி நரசிம்மா ஆகியோர், 'அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்சநீதிமன்றமே விளங்குகிறது. ஒருவேளை அரசியலமைப்பின் ஒரு அமைப்பு எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் அதற்குரிய கடமையை ஆற்ற மறுக்குமானால் அரசியலமைப்பின்படி நிறுவப்பட்ட நீதிமன்றங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, 'இதில் நாங்கள் தலையிட முடியாது, நாங்கள் சக்தியற்றவர்கள்' என்று வேடிக்கை பார்க்க முடியுமா? என்று கேட்டனர்.
இதையடுத்து துஷார் மேத்தா, 'ஒவ்வொரு அமைப்பும் அரசியலமைப்பின் பாதுகாவலரே. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிமன்றம் தன்னிச்சையாக சட்டத்தை இயற்றும் அதிகாரத்தை கையில் எடுத்துச் செயல்பட முடியாது' என்றார்.
Bu hikaye Dinamani Salem dergisinin August 22, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size