Denemek ALTIN - Özgür
அறம் பெருகட்டும்!
Dinamani Salem
|August 04, 2025
மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஒளவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி 'அறம் செய விரும்பு' என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.
பழந்தமிழரின் வாழ்க்கை ‘இன்பமும் பொருளும் அறனும்’ என்றாங்கு அன் பொடு புணர்ந்த ஐந்திணை வாழ்க்கையாகப் பகுக்கப்பட்டிருந்தது. இந்த மரபை மாற்றி அறம், பொருள், இன்பம் என்று முதன்மைப்படுத்தின அற இலக்கியங்கள். முதல், கரு, உரிப் பொருள்களிலிருந்து மேம்பட்டு வாழ்வுக்குரிய உறுதிப் பொருள்களை உணர்விக்கும் பெரும்பணியைச் செய்தன அவை.
காதலும் வீரமும் கண்ணெனப் போன்றிய சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, காதலையும் வீரத்தையும் அறமே ஒருசேரப் போதிக்கிறது; ஆதலால், அறத்தைக் கொள்மின் என வழிகாட்டின அற இலக்கியங்கள்.
அறம், வாழ்க்கைக்குத் தேவையான முதற்பொருள் மட்டுமன்று; இலக்கியத்துக்கும் அதுவே அடிப்படை. அறத்தை நூற்பயன்களில் முதன்மை என்கிறது நன்னூல். அன்புசார்ந்த அறத்தைத் தமிழர்கள் அகம் என்றனர். இன்பம் முதலாகிய மற்றெல்லாவற்றையும் புறம் என்றே அவர்கள் கருதினர். இன்பமும் பொருளும்கூட அறத்தோடு இயைகிற வேளையில் அதுவும் அகமாகிப் போவது அற்புதமல்லவா?
அரசியலாளர்களுக்கே அறம் முதன்மையானதாக விளங்குகிறது. சட்டங்களை இயற்றுதலோடு முடிந்து விடுவதில்லை அரசின் கடமை; இயற்றிய சட்டத்துக்கு மக்களிடமிருந்து நன்மதிப்பை ஈட்டுதலும், அந்தச் சட்டத்தை இடையறாது தொடர்ந்து தானே முன்னின்று காத்தலும், காத்த அந்தச் சட்டத்தின் தொகுதியை மேலும் மேலும் விரிவுபடுத்தி வகுத்தலும் ஓர் வல்லரசுக்குரிய பெருமையைப் பெற்றுத் தரும். அதாவது, சட்டம் உயர்ந்து யாவருக்கும் பொதுவான அறமாகிறபோதுதான் அது சிறப்புடையதாகிறது. பண்டைக்கால மன்னர்களின் ஆட்சிக்கு அறமே முதன்மையாக விளங்கியிருக்கிறது.
மன்னனுக்கு வெற்றி தருவது வேலன்று, அவன் முறையோடு நடத்துகின்ற கோல் தான் என்கிறார் திருவள்ளுவர்.
Bu hikaye Dinamani Salem dergisinin August 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Salem'den DAHA FAZLA HİKAYE
Dinamani Salem
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சங்ககிரி நகராட்சியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்
சங்ககிரி நகராட்சி சார்பில், நகர்ப்புற காடுகள் உருவாக்கம் திட்டத்தின் கீழ் கொங்குநகர் பகுதியில் உள்ள நகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலம் மீட்பு போலீஸார் விசாரணை
சேலம் ரயில் நிலையத்தில் 3 வயது சிறுவனின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் குடமுழுக்கு விழா
சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தில் மகா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Salem
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Salem
மேட்டூர் காவல் நிலைய எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம்
மேட்டூரில் சந்து கடைகளில் பறிமுதல் செய்த மதுப்புட்டிகளைச் சந்தையில் விற்பனை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் பிரசாந்த் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinamani Salem
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Salem
கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Translate
Change font size