Denemek ALTIN - Özgür
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
Dinamani Puducherry
|December 03, 2025
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
இப்புண்ணியத் தலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம், காசிக்கும் நமது தமிழ் நாட்டிற்கும் இடையேயான வரலாற்று பந்தத்தைக் கொண்டாடும் திருவிழாவாக மாறியிருக்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக இங்கே காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
கடந்த 2022-இல் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' என்று நாம் கொண்டாடிய பாரத விடுதலையின் 75-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது முதலாவது காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. அப்போதுமுதல், இந்நிகழ்வு தேசிய நல்லிணக்கத்துக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, கங்கையின் கலாசாரமும் காவிரியின் பண்பாடும் கைகோக்கும் விழாவாக, வடக்கும் தெற்கும் அதன் பொதுப் பாரம்பரியத்தின் வழி இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உருவெடுத்திருக்கிறது. இது மகாகவி பாரதியார் கண்ட கனவு.
'கங்கை நதிப் புரத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'
என்ற ஒருங்கிணைந்த ஒற்றுமையான உறுதியான இந்தியாவை உருவாக்க வழிவகுக்கும் விழாவாக காசி தமிழ் சங்கமம் விழா அமைந்துள்ளது.
பாரதியார் கண்ட கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் இன்று நிஜமாகிக் கொண்டிருக்கிறது. காசி தமிழ்ச் சங்கமத்தை வடிவமைப்பது என்கிற உயர்ந்த நோக்கத்தின் பின்னணியில் இருந்தவர் அவர்தான். தமிழகம் குறித்து உத்தர பிரதேசமும், வட இந்தியா குறித்துத் தென்னிந்தியாவும் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது இந்த நிகழ்வு.
அந்நியப் படையெடுப்பாலும், பிரிவினைவாத அரசியலாலும், குறுகிய கண்ணோட்டத்தாலும் பிரிந்து கிடந்த உணர்வுகளையும், உள்ளங்களையும் ஒருங்கிணைக்கும் காசி தமிழ் சங்கமம் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தின் விளைவுதான் இப்போது நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொண்டாட்டம்.
கடந்த ஞாயிறு, நவம்பர் 30-ஆம் தேதி ஒலிபரப்பான 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர், “காசி-தமிழ் சங்கமம் உலகின் மிகத் தொன்மையான மொழியும் உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றும் சங்கமிப்பதாகும்” என்று கூறினார்.
Bu hikaye Dinamani Puducherry dergisinin December 03, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE
Dinamani Puducherry
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Puducherry
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Dinamani Puducherry
மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
1 min
May 06, 2026
Dinamani Puducherry
வரலாறு படைத்தது தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Puducherry
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani Puducherry
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Puducherry
கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.
1 min
May 05, 2026
Listen
Translate
Change font size
