Denemek ALTIN - Özgür

சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'

Dinamani Puducherry

|

August 17, 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அறிந்த இவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பெங்களூரில் உள்ள பூர்ண பிரஜ்னா சம்ஸ்கிருத மந்திரம் என்ற சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தலைவராகவும் இருந்தவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து பாராட்டை பெற்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலையையும் கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களது சம்ஸ்கிருத மொழிப் பயணம் தொடங்கியது எப்படி?

நான் சிறுவயதிலிருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தேன். என் பெற்றோரும் எனக்கு பல சுலோகங்களையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தனர்.

தமிழ்தான் தாய்மொழி என்றாலும், சம்ஸ்கிருதத்தை என் இரண்டாவது தாய் மொழி என்று சொல்லலாம். கதைகள் படிக்கும்போது, அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்தக் கதையை நான் சம்ஸ்கிருதத்தில் எழுதிப் பார்ப்பேன். அப்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அலாதியான திருப்தி கிடைக்கும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடினமான மொழி என்று ஒரு கருத்து உண்டு. சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவைகளை, வாசித்துக் காட்டும்போது, அதைக் கேட்பவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். அப்போது சம்ஸ்கிருதம் என்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்னிடம் இருப்பது போல உணர்வேன். பெருமையும், மகிழ்ச்சியும் அடைவேன்.

பன்மொழி புலமை பெற்ற என் பாட்டி, கல்வியின் அவசியத்தை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருமணத்துக் குப் பிறகு என் கணவரும் ஊக்குவித்தார்.

சிறுவயதிலேயே எனக்கு 'ராமாயண ஹரி கதா' நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளுக்கு இடையிலும் மொழிபெயர்ப்புப் பணியில் என்னை ஈடுபடுத்தியது.

சம்ஸ்கிருதம் ஒரு 'புழக்கத்தில் இல்லாத மொழி' என்ற விமர்சனம் குறித்து?

Dinamani Puducherry

Bu hikaye Dinamani Puducherry dergisinin August 17, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Puducherry

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்துவைக்கிறார்

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Puducherry

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Puducherry

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size