Denemek ALTIN - Özgür

அரிய பண்புகளின் தலைமகன்

Dinamani Puducherry

|

July 15, 2025

காமராஜ் அதிகார ஆணவமோ, பதவி மோகமோ இல்லாத எளிய, இனிய மனிதர்; தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் ஓயாது உழைத்தவர்; ஆகவேதான், மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.

- முனைவர் அ.பிச்சை

வொஹர்லால் நேரு 1964-இல் நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டம். அப்போது, மேலைநாட்டுப் பத்திரிகையாளர்களில் சிலர், நேருவுக்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்றார்கள்; ஆனால், வேறு சிலர் இந்தியா சிதறாமல் நிற்கலாம் என்றாலும், அங்கு ஜனநாயகம் நீடிக்க வாய்ப்புகள் குறைவு என்று ஆரூடம் கூறினர்.

அதைப் பொய்யாக்கி, இந்தியாவில் ஒற்றுமையையும், ஸ்திரத்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் உறுதி செய்ததில் அன்றைய காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. அவர்களில், முதன்மையானவராகக் குறிப்பிடப்பட வேண்டியவர் கு.காமராஜ். ஆனால், இன்று அவர் தமிழ்நாட்டைத் தவிர்த்து- தேசத்தின் பிற பகுதிகளில் மறக்கடிக்கப்பட்ட தலைவராக ஆகிவிட்டாரே! என்று கவலையுடன் பதிவு செய்திருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜ் பதவி வகிக்கிறார். அது சமயம் நேரு தன் வீட்டில் நலிந்த நிலையில், ஓய்வு எடுத்து வருகிறார். அவரை காமராஜ் சந்திக்கிறார்.

‘ஐயா! எனக்கு உங்கள் அறிவுரை தேவை. உங்களுக்கு முழுமையான ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி நீங்கள் ஓய்வில் இருந்தால், உங்கள் பொறுப்பை நாங்கள் யாரிடம் கொடுப்பது? எனக் கேட்கிறார் காமராஜ். அதற்கு நேரு; ‘சாஸ்திரியை வைத்துப் பாருங்கள்’ என்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின்னால், ‘இந்திரா காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று காமராஜ் கேட்க, அதற்கு நேரு தந்த பதில்; ‘இப்போது வேண்டாம்’ என்பதாகும்.

அதன் பிறகு, சென்னை திரும்பிய காமராஜ், தன் நம்பிக்கைக்குரிய சகா வான சட்டப்பேரவைத் தலைவர் செல்ல பாண்டியனிடம் இந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்கிறார்.

அத்துடன் சேர்த்து, காமராஜ் பேரவைத் தலைவரிடம், “பாண்டியன்! இந்திரா காந்தியின் பெயரை நான் சொன்னவுடன், தலைவர் நேரு, ‘இப்போது வேண்டாம்’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘வேண்டாம்’ என்று சொல்லவில்லை! ஆகவே, நம் தலைவர் மனதில் இந்திரா காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது எனது ஊகம்’ என்றாராம்.

இவ்வாறு தன் தலைவனின் ஆழ்மனத்தில் கிடந்த எண்ணத்தை, தானே கேட்டறிந்து, அப்படியே முதலில் சாஸ்திரி, அடுத்து இந்திரா என்று நிறைவேற்றிக் காட்டிய தூய்மையான தேசத் தொண்டர் காமராஜ்.

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

Dinamani Puducherry

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Puducherry

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size