Denemek ALTIN - Özgür

நமது எதிர்காலம் நோக்கி...

Dinamani Puducherry

|

June 04, 2025

இன்றைய அரசியல் சமுதாயப் பிரச்னைகளுக்கு தீர்வுகாணத் துடிப்பவர்கள் இளைஞர்களிடம் நம்பிக்கை ஒளியைப் பெற முடியும். காரணம், இன்று வளர்ந்துள்ள அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் பயன்படுத்த இவர்கள் திட்டமிடுகிறார்கள்.

- க.பழனித்துரை

சமுதாயத்திலும் அரசியலிலும் உள்ள அவலங்களையும் அலங்கோலங்களையும் பார்த்துப் பார்த்து ஒருவித சலிப்பில் நம்பிக்கை இழந்தவர்களாக பெரும்பான்மை மக்கள் பேசுவதைத்தான் கேட்டு வருகிறோம். அதே நேரத்தில் மறுபக்கத்தில் நமக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையில் களத்தில் நின்று புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, எண்ணிலடங்கா இளைஞர்கள் செயல்படுவதை நம்மால் காணமுடிகிறது. நம்பிக்கை தரக்கூடிய நற்செயல்பாடுகள் நடக்கக்கூடிய இடங்கள் அனைத்தும் புறக்கணிப்புக் குள்ளான இடங்கள். எனவே, நாம் அங்கு சென்று பார்த்தால்தான் அந்த இளைஞர்களின் செயல்பாடுகளில் உள்ள பொறுப்பையும், தியாகத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் எப்படி நாட்டு விடுதலைக்கு தியாகம் செய்து போராடினார்களோ அதேபோல் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் யாருடைய பார்வையும் படாமல், அங்கீகாரத்துக்கு காத்திருக்காமல் அரசால் நிராகரிக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அரசாங்கத்தால் தொடமுடியாத மக்களைத் தொட்டு அவர்களுடைய பிரச்னை என்னுடையது என்று பொறுப்பேற்று செயல்படும் இளைஞர்களை பார்க்கும்போது, நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. அவர்களுடன் உரையாடும்போதுதான் அவர்கள் இன்று செயல்படுவது 'புதிய கனவில்', 'புதிய நம்பிக்கையில்' என்பது தெரிகிறது.

இவர்கள் அனைவரும் எதிர்காலத்துக்கான ஒரு மாபெரும் கனவில் செயல்படுவதை நம்மால் காணமுடியும். பொதுவாக, எந்த மனிதர்கள் தேங்குவார்கள் என்றால் மனித சுழற்சியின் வேகம் அறியாமல், மாற்றத்தின் வேகம் அறியாமல் மாற்றத்துடன் பயணிக்க மறுத்து தொடங்கிய இடத்தில் நின்று, வாழும் சூழலில் நிகழ்கின்ற எதிர்மறைச் செயல்களைப் பார்த்துப் பார்த்து நம்பிக்கை இழப்பவர்கள்தான். சாதனைமனிதர்கள் தேங்க மாட்டார்கள், திணற மாட்டார்கள், சமூக சுழற்சியின் திசையும் வேகமும் அறிந்து, தன் இலக்கை குறிக்கோளை காலநிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு தனக்கென உயர் சிந்தனைச் சூழலை உருவாக்கி செயலில் கரைவோர் அஞ்சாமல் கூச்சமற்று சவால்களைச் சமாளித்து அடுத்த காலத்துக்குச் சென்றுவிடுவர்.

Dinamani Puducherry'den DAHA FAZLA HİKAYE

Dinamani Puducherry

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

அனைத்து தெருநாய்களையும் அப்புறப்படுத்த உத்தரவிடவில்லை

உச்சநீதிமன்றம் விளக்கம்

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Puducherry

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Puducherry

பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் காலமானார்

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புக்கு பாடுபட்ட பிரபல சூழலியலாளர் மாதவ் காட்கில் (83) உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Puducherry

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size