Denemek ALTIN - Özgür
தூய்மை...வாழ்க்கை...துயரம்!
Dinamani Perambalur & Ariyalur
|March 28, 2025
தமிழகத்தின் புவியியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, தூய்மைப் பணியாளர்கள், கிராமப்புற குடிநீர் தொழிலாளர்களின் வாழ்க்கையை பல கோணங்களில் ஆராய்ந்து, அவற்றை முறைசெய்து, அத்தகையோரின் வாழ்க்கையை சமுதாய சராசரி சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
-
ஊர்தோறும் மலைமலையாகக் குப்பைகளை குவித்து வைத்திருப்பது உலகமயத்தின் மாபெரும் சாதனையாகும். தங்கள் கொள்ளை லாபத்துக்காக மக்களுக்கு ஆசையைக் காட்டி பொருளை வாங்க வைத்து, மிக விரைவில் அதை குப்பைக்குக் கொண்டு செல்ல வைத்து விடுகிறது உலகமயத்தின் நுகர்வுக் கலாசாரம். ஓரிரு நாட்கள் தூய்மைத் தொழிலாளர்களின் செயல்பாடுகள் நின்றுவிட்டால் போதும், நகரங்களும் கிராமங்களும் குப்பைகளில் மூழ்கிவிடும்!
குப்பைகளை அகற்றி அனைவருக்கும் தூய்மையைத் தருவது யார்?, அபாயம் நிறைந்த கழிவுத் தொட்டிகளில் முதலில் கையை விட்டும் பின் காலை வைத்து ஆழம் பார்த்தும், கடைசியில் தலையை மூழ்க வைத்தும் அடைப்புகளை அகற்றுவது யார்?, இதில் உயிர் இழந்தவர்களை எத்தனை காலத்துக்கு நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறது நன்றி மறந்த இந்த உலகம்?
ஒன்றுமட்டும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; குப்பை மேடுகளுக்குள்ளிருந்து, கைகளை உயர்த்திக் காட்டி இன்னும் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்று அந்த மனிதர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து யார்தான் கவலை கொள்ளப் போகிறார்கள்? இந்த மனிதக் கூட்டத்தின் நீதி, மனிதர்கள் வகுத்து வைத்திருக்கிற சமூகநீதிகளிலேயே முதன்மையானது என்பதை எப்போதுதான் நாம் உணரப் போகிறோம்?
சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திலேயே இவர்களுக்கான பணியை கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொடங்கி விட்டார்கள்; இந்தியா முழுவதும் இருந்து வெளிப்பட்ட அர்ப்பணிப்புப் பணி அது. தலைமறைவுக் காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்குப் பாதுகாப்பைத் தந்தவை, அன்றைய ஊரின் ஒதுக்குப் புறத்திலிருந்த தூய்மைத் தொழிலாளர்களின் எளிய குடியிருப்புகள்தான்.
Bu hikaye Dinamani Perambalur & Ariyalur dergisinin March 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Perambalur & Ariyalur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Perambalur & Ariyalur
ரொனால்டோ தலைமையில் அல் நாசர் சாம்பியன்
சவூதி அரேபியாவில் நடைபெற்ற சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் சாம்பியன் ஆனது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல்: ஓய்வு பெற்றார் விஜய் சங்கர்
உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (35) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
பயனற்ற உயிருக்கு விடுதலை
கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. கருணை மரணத்தை அனுமதித்து அளிக்கப்பட்ட அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது.
2 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
காலிறுதியில் அஸ்மிதா தோல்வி
மலேய்சியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார். இத்துடன் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
3 கல்வியாளர்கள் தொடர்பான உத்தரவை மாற்றிய உச்சநீதிமன்றம்
என்சிஇஆர்டி பாட புத்தக விவகாரம்
1 mins
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய மகளிர் அணி
ஜப்பானில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 25 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
ஃபெடரேஷன் கோப்பை: அனிமேஷ் தேசிய சாதனை
ஜார்கண்டில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள போட்டியில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை ஒரே நாளில் இருமுறை முறியடிக்கப்பட்டது.
1 min
May 23, 2026
Dinamani Perambalur & Ariyalur
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 mins
May 22, 2026
Dinamani Perambalur & Ariyalur
மின் கட்டணம் உயர்த்தப்படாது
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
May 22, 2026
Translate
Change font size

