Denemek ALTIN - Özgür
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு இல்லை
Dinamani New Delhi
|November 21, 2025
மசோதா ஒப்புதல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விளக்கம்
மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க மாநில ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நீதித் துறை காலக்கெடு நிர்ணயிப்பது பொருத்தமற்றது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை விளக்கமளித்தது.
அதேசமயம், மசோதாக்கள் மீது 'நிரந்தரமாக' முடிவெடுக்காமல் அப்படியே வைத்திருக்கும் 'கட்டுப்பாடற்ற' அதிகாரங்கள் ஆளுநருக்கு இல்லை என்று அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியது.
தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் முடிவு எடுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அதில், மசோதாக்கள் மீது உரிய முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதம்; அரசமைப்பின் 142-ஆவது பிரிவு அளித்துள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தாமதிக்கப்பட்ட மசோதாக்கள் நிறைவேறியதாக கருதப்படும். பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
111 பக்க விளக்கம்: இந்தத் தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பினார். அதுகுறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து ஒருமனதாக வியாழக்கிழமை விளக்கமளித்தது. 111 பக்கங்கள் கொண்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்: மசோதாக்கள் விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று தேர்வுகள் உள்ளன. முதலாவதாக, மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்கலாம். இரண்டாவதாக, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். மூன்றாவதாக, அரசமைப்பின் 200-ஆவது பிரிவின்படி மசோதாவை நிறுத்தி வைத்து, அதை பேரவையின் மறு ஆய்வுக்கே திருப்பி அனுப்பலாம்.
Bu hikaye Dinamani New Delhi dergisinin November 21, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani New Delhi'den DAHA FAZLA HİKAYE
Dinamani New Delhi
விவசாயிகளுக்கு ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு
விவசாயிகளுக்கு ஒரே ஆண்டில் இருமுறை நிவாரணம் அளித்தது அதிமுக அரசு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani New Delhi
சோனியா, ராகுல் மீது புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு
நேஷனல் ஹெரால்ட் வழக்கு
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மழை வெள்ள பாதிப்பு: மீட்புப் பணியில் இந்திய விமானப் படை
உயிரிழப்பு 334-ஆக உயர்வு
1 mins
December 01, 2025
Dinamani New Delhi
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரத்துக்கு நீட்டித்திருப்பது திமுகவுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று திமுக சட்டத் துறைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani New Delhi
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

