Facebook Pixel ஸ்ரீ அரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு! | Dinamani Nagapattinam - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun
Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

ஸ்ரீ அரவிந்தர் என்னும் ஒளிவிளக்கு!

Dinamani Nagapattinam

|

August 15, 2025

அரவிந்தர் சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையை தோற்றுவிப்பதில் அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர்.

அரவிந்தரின் மேடைப் பேச்சு, அதைக் கேட்கும் அனைவரின் மனத்தையும் கொள்ளை கொள்ளக் கூடியது. திருந்திய உச்சரிப்பு, உணர்ச்சி பொங்கப் பேசும் ஆற்றல், தன் தரப்பை ஆணித்தரமாக நிறுவுவதில் தென்படும் விவாதக் கோணம், முக்கியமாக அந்த மதுரக் குரல்...என்றிப்படி அவரது மேடைப் பேச்சின் சிறப்பம்சங்கள் பல. அவரது சொற்பொழிவுக்கு ஏராளமான பொதுமக்கள் ரசிகர்களாக இருந்தார்கள். சுதந்திர மேடைகளில் அவர் பேசுகிறார் என்ற அறிவிப்பு வந்தால் ஆயிரக்கணக்கானோர், அவர் பேச்சைக் கேட்க குறித்த நேரத்துக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். அரசியல் பிரமுகர்களும் அவர் சொற்பொழிவை விரும்பி கேட்டு வியந்தார்கள்.

அவரது சொற்பொழிவின் மதிப்பை உணர்ந்திருந்தார் மகாத்மா காந்தி. மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தோற்றுவிப்பதில் கொல்கத்தா பிரமுகரான அரவிந்தரின் பேச்சாற்றலுக்குப் பெரும் பங்குண்டு என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

மகாத்மா காந்தி மட்டுமா, பிரிட்டிஷ் அரசும்கூட அரவிந்தரின் பேச்சாற்றலைப் பற்றி அறிந்து வைத்திருந்தது. மக்களை மயக்கும் சொற்பொழிவாளரான அரவிந்தரை வெளியே விட்டுவைத்தால், நாளுக்கு நாள் மக்களிடையே சுதந்திர வேட்கை அதிகரிக்குமே?

எனவே, அரவிந்தரைக் கைதுசெய்யும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது அது. அதற்கு ஏதுவாக ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 1908-ஆம் ஆண்டு மே இரண்டாம் தேதி, முசாபர்பூர் வெடிகுண்டு விபத்தில் இரு வெள்ளைக்காரப் பெண்மணிகள் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்துக்கும் அரவிந்தருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் காவல் துறையினர் அறிவார்கள்.

அதனால் என்ன? அந்தப் பழியைத் தூக்கி அரவிந்தர் மீது போடுவோம்; அந்த விபத்துக்கு அவர் செய்த சதிதான் காரணம் என்று கூறுவோம். அதனால் தான் அவரைக் கைது செய்கிறோம் என அரவிந்தருக்கு தண்டனை தரப்படுவதை நியாயப்படுத்தி விடுவோம். இப்படி நினைத்த காவல் துறை அரவிந்தரைக் கைது செய்தது. அவர் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தான் வழிபடும் கண்ணன் அவனைப் பற்றித் தவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறான் என்பதாக அரவிந்தர் புரிந்துகொண்டார். கண்ணனைக் குறித்து சிறைக்குள்ளேயே தவம் நிகழ்த்தலானார்.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

ஹைதராபாத்தில் அக்டோபரில் வில்வித்தை பிரீமியர் லீக்

வில்வித்தை பிரீமியர் லீக் (ஏபிஎல்) இரண்டாவது சீசன் தொடர் ஹைதராபாதில் வரும் அக். 8 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Nagapattinam

நிதி ஆயோக் கூட்டம்: புதுச்சேரி முதல்வர் புறக்கணிப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பங்கேற்கவில்லை.

time to read

1 min

June 11, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size