Denemek ALTIN - Özgür

விரிவுபடுத்த வேண்டும்!

Dinamani Nagapattinam

|

March 13, 2025

விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

அதிகமான விளைச்சல் பரப்பில் பயிரிடுபவர்கள் என்பதால் அவர்கள் அதிக கவனம் பெறுவதில் வியப்பொன்றுமில்லை. அதே நேரத்தில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை பயிரிடும் விவசாயிகளின் நலன் பேணப்படாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகள், பால் போன்றவை போதிய விலை பெறாமல் போகும்போது, விவசாயிகள் மனக்கொதிப்பில் அவற்றை சாலைகளில் கொட்டிப் போராடுவது என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக நாடு தழுவிய அளவில் தொடர்கிறது. அதேபோல, மல்லிகை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட மலர் விவசாயத்தில் ஈடுபடும் வேளாண் பெருமக்களும் தங்களது விளைபொருள்களுக்கு போதிய விலை கிடைக்காமல் அவற்றை வீணாக்குவதும் அவ்வப்போது நிகழ்கிறது.

பணப்பயிர்களைப் போல பெரும் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுபவை அல்ல, காய்கறிகளும், மலர் வகைகளும். வாழை, மா, எலுமிச்சை, கறிவேப்பிலை, முருங்கை, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு போன்றவை விதிவிலக்குகள். அவற்றிலுமேகூட, அதிக விளைச்சல் ஏற்படும் போது, போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை எதிர்கொள்கிறார்கள்.

விளைந்த தக்காளி பழத்தை சாலைகளில் கொட்டியும், விளைந்த வயல்களிலேயே அழித்தும் வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இடுபொருள்களுக்கான விலைகூட கிடைக்காததால் அவற்றை அழிக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அதே பொருள்கள் நுகர்வோருக்கு கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

Dinamani Nagapattinam'den DAHA FAZLA HİKAYE

Dinamani Nagapattinam

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Nagapattinam

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size