Denemek ALTIN - Özgür

அறம் பெருகட்டும்!

Dinamani Madurai

|

August 04, 2025

மழலை பேசும் தமிழ்க் குழந்தையிடம் ஒளவைப் பெருமாட்டி கற்றுத் தருகிற முதல் மொழி 'அறம் செய விரும்பு' என்பதேயாம். அவ்வழியே மன்னன் முதல் மக்கள் வரையிலும் அறத்தை விரும்பிப் பேணுகிற நாட்டில் அமைதி நிலவும்; இன்பம் செழித்தோங்கும்; மானுடம் வெல்லும்.

- முனைவர் அருணன் கபிலன்

பழந்தமிழரின் வாழ்க்கை ‘இன்பமும் பொருளும் அறனும்’ என்றாங்கு அன் பொடு புணர்ந்த ஐந்திணை வாழ்க்கையாகப் பகுக்கப்பட்டிருந்தது. இந்த மரபை மாற்றி அறம், பொருள், இன்பம் என்று முதன்மைப்படுத்தின அற இலக்கியங்கள். முதல், கரு, உரிப் பொருள்களிலிருந்து மேம்பட்டு வாழ்வுக்குரிய உறுதிப் பொருள்களை உணர்விக்கும் பெரும்பணியைச் செய்தன அவை.

காதலும் வீரமும் கண்ணெனப் போன்றிய சங்க இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு, காதலையும் வீரத்தையும் அறமே ஒருசேரப் போதிக்கிறது; ஆதலால், அறத்தைக் கொள்மின் என வழிகாட்டின அற இலக்கியங்கள்.

அறம், வாழ்க்கைக்குத் தேவையான முதற்பொருள் மட்டுமன்று; இலக்கியத்துக்கும் அதுவே அடிப்படை. அறத்தை நூற்பயன்களில் முதன்மை என்கிறது நன்னூல். அன்புசார்ந்த அறத்தைத் தமிழர்கள் அகம் என்றனர். இன்பம் முதலாகிய மற்றெல்லாவற்றையும் புறம் என்றே அவர்கள் கருதினர். இன்பமும் பொருளும்கூட அறத்தோடு இயைகிற வேளையில் அதுவும் அகமாகிப் போவது அற்புதமல்லவா?

அரசியலாளர்களுக்கே அறம் முதன்மையானதாக விளங்குகிறது. சட்டங்களை இயற்றுதலோடு முடிந்து விடுவதில்லை அரசின் கடமை; இயற்றிய சட்டத்துக்கு மக்களிடமிருந்து நன்மதிப்பை ஈட்டுதலும், அந்தச் சட்டத்தை இடையறாது தொடர்ந்து தானே முன்னின்று காத்தலும், காத்த அந்தச் சட்டத்தின் தொகுதியை மேலும் மேலும் விரிவுபடுத்தி வகுத்தலும் ஓர் வல்லரசுக்குரிய பெருமையைப் பெற்றுத் தரும். அதாவது, சட்டம் உயர்ந்து யாவருக்கும் பொதுவான அறமாகிறபோதுதான் அது சிறப்புடையதாகிறது. பண்டைக்கால மன்னர்களின் ஆட்சிக்கு அறமே முதன்மையாக விளங்கியிருக்கிறது.

மன்னனுக்கு வெற்றி தருவது வேலன்று, அவன் முறையோடு நடத்துகின்ற கோல் தான் என்கிறார் திருவள்ளுவர்.

Dinamani Madurai

Bu hikaye Dinamani Madurai dergisinin August 04, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Madurai

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Madurai

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Madurai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size