Denemek ALTIN - Özgür

வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!

Dinamani Madurai

|

July 26, 2025

ன்று எங்கும் புதிய தலைமைத்துவத்திற்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுயநல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பார்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.

- க. பழனித்துரை

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் ஓர் அறிவியலாளராக தொழில்நுட்பவாதியாக அரசில் செயல்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரித்த இந்திய மக்களின் மாபெரும் தலைவர். அவர் புகழப்படுவது, போற்றப்படுவது அவர் வகித்த பதவியால் அல்ல; அவர் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் கனவாலும் தான்; 'இந்தியா 2020' என்பது அவர் தயாரித்த ஒரு கனவுத் திட்டம்.

இந்தியா என்ற நாடு இருக்கிறது; அங்கு மக்கள், அரசு நிர்வாகக் கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், தொழில்சாலைகள், கல்விச் சாலைகள், விவசாயிகள், ஊடகங்கள், குடிமைச் சமூகங்கள் என அனைத்தும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இருந்தபோதும், நம் நாட்டின் விடுதலைக்கு மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் கண்ட கனவு சுதந்திரத்துக்குப் பிறகு நனவானதா என்ற கேள்வியில் இவர் தொடங்கி, இல்லை என்ற நிலையில், அதை இந்தியாவுக்கு தலைமை வகிக்கும் நாம் ஏன் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்து உருவாக்கியதுதான் இந்தக் கனவு 'இந்தியா 2020'.

அன்றைய சூழலில் அரசும், நிர்வாகமும், அரசியலும் உளுத்துப் போய்க் கொண்டிருப்பதை நல்லவர்கள் பார்த்து ஆதங்கப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் வாளா இருப்பதைக் கண்ட இவர், புதிய கனவில் இவர்களை இணைக்க முயன்றார். காரணம், இவரின் கனவு ஒரு துறைக்கானதோ அல்லது பகுதிக்கானதோ அல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கானது; நாட்டு மக்களுக்கானது.

இந்தக் கனவை நிறைவேற்ற அரசுக் கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் ஒட்டு மொத்த இந்தியாவும் கிளர்ந்தெழ வேண்டும்; சுதந்திரப் போராட்டத்துக்கு மக்கள் தியாகம் செய்யப் புறப்பட்டதுபோல், இந்தச் செயல்பாடுகளுக்கு தேவை தியாகம் அல்ல; நாட்டுப்பற்றுடன் தாங்கள் செய்யும் அனைத்துப் பணிகளையும் அறப்பணியாக செய்தாலே போதுமானது. அனைத்தும் நாட்டுக்கான பணியாக மாறிவிடும்.

Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE

Dinamani Madurai

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Madurai

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Madurai

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Madurai

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Madurai

வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்

சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Madurai

வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Madurai

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Madurai

பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்

மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.

time to read

1 mins

January 09, 2026

Dinamani Madurai

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Madurai

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size