Denemek ALTIN - Özgür
நாடு இன மாடுகளைக் காப்போம்!
Dinamani Kanyakumari
|September 30, 2025
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
வேளாண்மைக்கு அடுத்து துணைத் தொழிலாக இருந்த கால்நடை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதன்மூலம் கிடைக்கும் வருமானமே பிரதானம் என்ற நிலையில், தரமானதாக இருந்தாலும் குறைந்த அளவில் பால் உற்பத்தி செய்யும் உள்நாட்டு கறவை மாடுகளின் மீதான ஆர்வம் குறையத் தொடங்கியது.
இதையடுத்து, உள்நாட்டு கால்நடை இனங்களின் வீழ்ச்சி தொடங்கியது. கடந்த 2019-இல் நடைபெற்ற 20-ஆவது தேசிய கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்நாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற அளவில் குறைந்துள்ளது.
2012-இல் 24.59 லட்சம் என்ற அளவில் இருந்த உள்நாட்டு இன மாடுகள் 2018-இல் 18 லட்சம் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது, தமிழகத்தில் இக்காலகட்டத்தில் 6.65 லட்சம் உள்நாட்டு இன மாடுகள் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எருமை மாடுகளின் எண்ணிக்கையும் 6.6 லட்சத்திலிருந்து 5.18 லட்சமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், இக்காலகட்டத்தில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு இன மாடுகளின் எண்ணிக்கை 13.21 லட்சம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
Bu hikaye Dinamani Kanyakumari dergisinin September 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Kanyakumari'den DAHA FAZLA HİKAYE
Dinamani Kanyakumari
குருவாயூர் - சென்னை இடையே ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்
குருவாயூர் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Translate
Change font size
