Denemek ALTIN - Özgür
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
Dinamani Erode & Ooty
|November 01, 2025
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
தொடரில் வரும் ஒரு கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டு, 'உங்கள் வில்லத்தனத்துக்கு ஓர் அளவே இல்லையா? ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள்? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா' போன்ற கேள்விக் கணைகளைத் தொடுத்து தாங்களும் கொந்தளித்தார்கள். இதைப் பார்க்க பார்க்க வேடிக்கையாக இருந்தது.
வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள், 'இந்தக் கேள்விகளை இயக்குநரிடம் கேட்காமல் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்' என நேரடியாக சொல்லாமல் அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப எதை எதையோ சொல்லி சமாளித்தார்கள். முன்பு திரைப்படங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறியாத மக்கள் அதை உண்மை என்றே கருதி அதில் வரும் வில்லன்-வில்லிகளை திரையரங்கைவிட்டு வெளியே வந்ததும், மண்ணை வாரி தூற்றிச் சபிப்பார்கள். அன்று இருந்த தலைமுறையினர் இன்னும் மிச்சம் இருக்கிறார்களோ என்று எண்ணும் வகையில் இருந்தது அவர்களது செயல்கள்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்தால்கூட அதன் கதையம்சத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றி சில நாள்கள் பேசி விட்டு வேறு வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம். ஆனால், இந்த நெடுந்தொடர்கள் தினமும் நம் வீட்டுக்குள் வந்து கதவைத் தட்டுகின்றன. இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, ஓர் அலைவரிசை சேவையில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு பத்து நெடுந்தொடர்களை ஒளிபரப்புகிறார்கள். அதை நாள் முழுவதும் அமர்ந்து பார்க்கும் மனநிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.
பல வீடுகளில் பெண்மணிகள் வீட்டு வேலைகள் முடிந்ததும் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி இடைவெளியே இல்லாமல் பிற்பகல் 3 மணி வரை பார்க்கின்றனர். பின்னர், மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நெடுந்தொடர்களைக் கண்டு துக்கப்படுகின்றனர். இதில் இன்னும் சில வகை பெண்கள் இடையிடையே ஒளிபரப்பப்படும் விளம்பர இடைவேளைகளைக் கூட விடுவதில்லை. அந்த நேரத்தில் வேறு வேறு அலைவரிசைகளை மாற்றி மாற்றி இன்னும் இரண்டு நெடுந்தொடர்களைக் கூடுதலாக கண்ணுற்று சாமர்த்தியமாக நேரத்தை மிச்சம் பிடிக்கின்றனர்.
Bu hikaye Dinamani Erode & Ooty dergisinin November 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE
Dinamani Erode & Ooty
பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு
பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி
1 mins
May 18, 2026
Dinamani Erode & Ooty
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல
மத்திய கல்வி அமைச்சகம்
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Erode & Ooty
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Erode & Ooty
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size
