Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

Dinamani Erode & Ooty

|

May 09, 2025

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

- பழ. கருப்பையா

அண்மைக் காலமாக நாடு இதுவரை சந்தித்திராத சட்டச் சிக்கல்களைச் சந்திக்க நேரிட்டது. நம்முடைய அரசியல் சாசனம் மிகவும் விரிவானது. ஆட்சியினர், அதிகார வர்க்கம், நீதித்துறை எனத் தனித்தனி அதிகாரங்களோடு மூன்று பிரிவுகளாக வரையறுக்கப்பட்டு, நாடு இயங்குகிறது. ஒன்றோடு ஒன்று உராய்வதும் உண்டு. எழுதி வைக்கப்பட்டுள்ள சாசனத்தின்படி அந்த உராய்வுகளுக்குத் தீர்வு காணப்படுவதுமுண்டு. உச்சநீதிமன்றத்தைக் 'குடியாட்சியின் காவல் நாய்' என்று கூறுவர். அரசியல் சாசனமே உயர்ந்தது என்று அதற்குத் தனிப்பு கழ் பாடுவோரும் உண்டு. எந்த அரசியல் சாசனமும் மனிதர்களால் ஆக்கப்படுவதுதான். அதை ஆக்கும் மனிதர்களின் அறிவுத் திறம், நேர்மைத் தரத்தை ஒட்டி அந்தச் சாசனம் சிறப்புறுகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட காலம் அறம் பிறழாச் சான்றோர்கள் நாட்டின் தலைமைகளில் இருந்த காலம். நேரு, வல்லபபாய் படேல், அம்பேத் கர், கிருபளானி, செயப்பிரகாசு நாராயணன், இராசாசி என நிகரற்ற அறிஞர்களும் மழை பெய்யென்று இவர்கள் கட்டளையிட்டால் பெய்யும் என்று சொல்லத்தக்க அளவு நேரியர்களும் சேர்ந்து விவாதித்து விவாதித்து உருவாக்கிய அரசியல் சாசனம் நம்முடையது. இந்தியத் தலைமையமைச்சராய் இருந்த மொராச்சி தேசாய் ஒருமுறை சொன்னார்: குற்றவியல் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டாலும், என்னால் எந்தத் தப்பும் செய்ய முடியாது. இப்படி அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது. பேரரசன் அசோகனுக்குப் பிறகு அறம் கோலோச்சிய காலம் அது தான். நியாயமே எல்லாவற்றிலும் பெரியது. தனிமனித வாழ்வாயினும், ஆட்சி அதிகாரமாயினும் நியாயத்தை மையமாகக் கொண்டே சிந்தித்தும் வாழ்ந்தும் பழக்கப்பட்ட தலைமுறையினர் வடித்த அரசியல் சாசனம் என்பதால் அவர்கள் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். அந்த இன்னொரு பக்கம்தான் இன்றைய குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். ஒரு மந்திரி போக்குவரத்துத் துறையில் இருந்தார். ஓட்டுநர், நடத்துநர் வேலைகளுக்கு ஆளெடுத்தபோது, அவர்களுக்கு அந்த வேலைகளைத் தருவதற்காக இலஞ்சம் வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கு கொஞ்ச

Dinamani Erode & Ooty'den DAHA FAZLA HİKAYE

Dinamani Erode & Ooty

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Erode & Ooty

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட உ.பி. கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Erode & Ooty

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size