மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது
Dinamani Dharmapuri
|July 02, 2025
கோயில் காவலாளி கொலை வழக்கில் உயர்நீதிமன்றம்; தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி
-
மதுரை, ஜூலை 1: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலை யுண்ட விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
'ஒரு மாநிலம் தனது குடிமகனை கொலை செய்திருக்கிறது' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் காணாமல்போனது தொடர்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித் குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் துறையினர் விசாரணையின் போது நடத்திய தாக்குதலில் அஜித் குமார் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அஜித் குமார் மரணம் குறித்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் ராஜராஜன், மாரீஸ்குமார், அருண் சுவாமிநாதன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன் திங்கள்கிழமை முறையீடு செய்தனர். மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குரைஞர் ஹென்றி திபேன் தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
Bu hikaye Dinamani Dharmapuri dergisinin July 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Dharmapuri'den DAHA FAZLA HİKAYE
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

