Denemek ALTIN - Özgür
நாயைக் கொல்லாத புலி!
Dinamani Cuddalore
|July 01, 2025
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.
சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.
அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.
விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!
மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!
விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.
Bu hikaye Dinamani Cuddalore dergisinin July 01, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Cuddalore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Cuddalore
ஃபெடரல், ஏயூ சிறு நிதி வங்கிகளின் பங்குகளை கையகப்படுத்த 'கோடக்'
ரிசர்வ் வங்கி அனுமதி
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
மணிப்பூர்: கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்; வீடுகளுக்கு தீவைப்பு
மணிப்பூரில் இந்தியா-மியான்மர் எல்லையையொட்டிய காம்ஜோங் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
திருச்செந்தூர் அருகே ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா
புதுச்சேரியில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, தனது முதல்வர் பதவியை என்.
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!
தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
2 mins
May 08, 2026
Dinamani Cuddalore
முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்
பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.
2 mins
May 08, 2026
Dinamani Cuddalore
மதச்சார்பின்மையைக் காக்கவே தவெகவுக்கு ஆதரவு
திமுகவுக்கு காங்கிரஸ் பதில்
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு
தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி
இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை
1 min
May 08, 2026
Dinamani Cuddalore
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!
ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.
3 mins
May 06, 2026
Translate
Change font size
