Denemek ALTIN - Özgür
சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்
Dinamani Coimbatore
|September 26, 2025
வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.
இங்கு கோயில் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராணச் சம்பவம் உள்ளது.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன், தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணம் செய்து வைக்க நினைத்தார், இந்திரன். அந்தத் திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் நடத்தி வைக்க விரும்பிய ஈசன், அங்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்த பசுஞ்சோலையில் தங்கியிருந்தார்.
அப்போது அன்னை உமாதேவி அவரை வணங்கி, திருமந்திரத்தை உபதேசிக்கும்படி வேண்டினாள். மந்திரம் ஓத, கடல் அலையின் பேரிரைச்சலும், பனை மரங்களின் சலசலப்பும், குயவன் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூறாக இருந்ததால், ஈசன் அவற்றை நிறுத்தி, அம்பிகைக்கு திருமந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் திருமந்திர நகர் என அழைக்கப்பட்ட இவ்வூரில் காசியப முனிவர் சிவலிங்கத்தை நிறுவி, அனைவரும் வழிபடச் செய்தார். பிற்காலத்தில் இந்த ஊர் தூத்துக்குடி என அழைக்கப்பட்டது.
இத்தலத்து இறைவன் சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டது எப்படி?
திருமந்திர நகருக்கு அண்மையில் உள்ள கயத்தாரை தலைநகராகக் கொண்டு சங்கரராம பாண்டியன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த சிவபக்தனான அவனுக்கு எல்லாப்பேறுகள் வாய்த்தாலும் சந்ததி பேறு மட்டும் கூடிவரவில்லை. அதனால் தான் மனைவியுடன் காசி சென்று புனித கங்கையில் நீராடி மகவு வேண்டி மகேசனை வணங்கினான். அப்போது இறைவனின் அருள் வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தன.
Bu hikaye Dinamani Coimbatore dergisinin September 26, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Coimbatore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Coimbatore
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Coimbatore
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Coimbatore
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Coimbatore
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Translate
Change font size
