Denemek ALTIN - Özgür

இளமை கழிந்ததற்கு ஒரு இரங்கற்பா!

Dinamani Coimbatore

|

July 06, 2025

கையறுநிலை என்பது புறப்பொருள் துறைகளுள் ஒன்று. அரசன் இறப்பு அவனைச் சேர்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் எனப் புறப்பொருள் வெண்பா மாலை (267) இதற்கு இலக்கணம் கூறுகிறது.

- முனைவர் ம.பெ.சீனிவாசன்

முனைவர் ம.பெ.சீனிவாசன்

இந்த வகையில் பாரியின் மறைவுக்காக கபிலரும், பாரி மகளிரும், அதியமானஞ்சிக்காக ஒளவையும் பாடிய புறநானூற்றுப் பாடல்கள் புகழ்மிக்கவை; இன்றும் நம் கண்களில் நீர் சுரக்க வைப்பவை.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின் எந்தையு முடையேம்; எம் குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (112)

பாரி மகளிர் தந்தையையும் தமக்குரிய மலையையும் இழந்து செயலற்று ஏங்கிப் பாடுதலின் இது கையறு நிலையாயிற்று. இந்த அவலத்துக்கு இடையிலும் வஞ்சனையால் வென்ற மூவேந்தரை, 'வென்று எறி முரசின் வேந்தர்' என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

ஏனையோர்க்கெல்லாம், 'இனியன்' ஆகிய பாரி மூவேந்தர்க்கு மட்டும் 'இன்னான்' (வேண்டாதவன்) ஆனது எப்படியோ? என்னும் கபிலரின் கூற்றிலும் இவ்வெள்ளல் குறிப்பே எதிரொலிக்கின்றது.

அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே (115:5-6) என்பன அவரின் பாடலடிகள்.

இவ்வாறே அதியமானஞ்சியின் மறைவுச் செய்தி கேட்டதும், இல்லாகியரோ காலை மாலை! அல்லாகியர் யான் வாழும் நாளே! (232) என்னும் ஒளவையின் பாடலில் ஒலிக்கும் அவலத்தையும் அளவிட்டுச் சொல்லவியலாது.

மேலும், 'சிறியகட்பெரினே' (233) எனத் தொடங்கும் பாடலில், இனிப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கொன்று ஈகுநரும் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி முடிப்பது அதியமான் நெடுமான் அஞ்சியின் வள்ளன்மை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளமாகவே உள்ளது.

Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

உலக ‘சர்வாதிகாரி’ டிரம்ப்...?

தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வெனிசுலா, 8,82,046 சதுர கி. மீ. பரப்பளவையே கொண்ட ஒரு சிறிய எண்ணெய் வளம் மிக்க வெப்பமண்டல நாடு.

time to read

3 mins

January 08, 2026

Dinamani Coimbatore

அதிமுக கூட்டணியில் பாமக

எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு

time to read

1 min

January 08, 2026

Dinamani Coimbatore

டி20 உலகக் கோப்பை: ஐசிசி நிர்வாகத்துடன் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசனை

டி20 உலகக் கோப்பை போட்டி தொடர் பான சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் ஐசிசி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 08, 2026

Dinamani Coimbatore

பெண்காக் சிலாட்: தமிழகத்துக்கு 2-ஆவது பதக்கம்

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) பெண்காக் சிலாட் பிரிவில் தமிழக ஆடவர் அணி புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Coimbatore

எண்ணமே வாழ்வு!

வாழ்வு என்பது ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான சிறியபெரிய சவால்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது.

time to read

2 mins

January 08, 2026

Dinamani Coimbatore

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size