ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் நான்கு வழிச் சாலைத் திட்டம்
Dinamani Coimbatore
|July 02, 2025
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நமது நிருபர் புது தில்லி, ஜூலை 1: தமிழகத்தின் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலை எண் 87-ஐ நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
அரசும், தனியாரும் இணைந்து நிதிப்பகிர்வு மேற்கொள்ள வகை செய்யும் ஹெச்ஏஎம் எனப்படும் ஹைபிரிட் அன்யுட்டி மாடல் அடிப்படையில் ரூ.1,853 கோடி மொத்த மூலதனத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மாடலின்படி இபிசி எனப்படும் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் பிஓடி எனப்படும் கட்டமைத்தல், இயக்குதல், பரிமாற்றம் ஆகிய பணிகளை அரசும் தனியாரும் கூட்டாக செயல்படுத்தும். அரசு நிதி வழங்குவதால் தனியார் எதிர்கொள்ளும் வணிக அபாயம் குறைகிறது. திட்டமும் விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 87) போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம்போன்ற விரைவான வளர்ச்சி கண்டுவரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் உதவும். 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாள்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாள்களையும் இது உருவாக்கும்.
Bu hikaye Dinamani Coimbatore dergisinin July 02, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Coimbatore
2026-ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு மறுமலர்ச்சி தருமா கேரளம்?
கடந்த ஆண்டு பிகார் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களில் மோசமான தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 2026-ஆம் ஆண்டில் கேரளம் மறுமலர்ச்சியைத் தருமா?
1 mins
January 03, 2026
Dinamani Coimbatore
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Coimbatore
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Coimbatore
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Coimbatore
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Coimbatore
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Coimbatore
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Coimbatore
தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 02, 2026
Dinamani Coimbatore
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Coimbatore
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Translate
Change font size

