Denemek ALTIN - Özgür
பொறுப்புகளை ஏற்கும் அரசு தேவை
Dinamani Coimbatore
|June 17, 2025
மக்களுக்கு தரமான வேலைவாய்ப்பு தேவை; இதற்கு ஒரு பொருத்தமான திட்டமிடுதல், நன்கு வரையறுக்கப்பட்ட இலக்குகள், அதற்கான வழிமுறைகள் தேவை. அனைத்தையும் தனது பொறுப்புகளாக ஏற்றுக்கொள்ளும் அரசு தேவை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2025-26-ஆம் ஆண்டில் 4,187.017 பில்லியன் டாலராக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது. இது ஜப்பானின் 4,186.431 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது 586 மில்லியன் டாலர் (ரூ.5,011 கோடி) அதிகமாகும். இது இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாற்றும், ஜப்பானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளும்.
இப்போதைய நிலையில் அமெரிக்கா (30.5 டிரில்லியன்), சீனா (19.2 டிரில்லியன்), ஜெர்மனி (4.74 டிரில்லியன்) ஆகியவை இந்தியாவைவிட உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன.
நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் இந்த சாதனை குறித்துப் பேசியபோது இந்தியர்களுக்கு பெருமையளிப்பதாக இருந்தது.
அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் என்னவென்றால், இந்தியா 2028-ஆம் ஆண்டில் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்துக்கு உயரும்; ஜெர்மனியை முந்திச் செல்லும் என்பதாகும். இந்த முன்கணிப்புகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார நாடாக ஏற்கெனவே உயர்ந்திருக்க வேண்டும் என்பது தான் உண்மை. மூன்றாவது, நான்காவது இடத்துக்கு போட்டியிடும் நாடாக இருந்திருக்கக் கூடாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையை நாம் கொண்டிருக்கிறோம். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலகின் செல்வத்திலும், வருவாயிலும் இந்தியா 18 சதவீதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இப்போது வெளியாகியுள்ள கணிப்புகள் உருவாக்கிய மகிழ்ச்சியிலேயே நிலை கொண்டுவிடாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது. ஏனெனில், உண்மை நிலவரத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வது நமது சரியான இடத்தை அடைவதற்கான பாதையை வடிவமைப்பதற்கு மிக அவசியம்.
இதற்காக நாம் மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் வளர்ச்சி தொடர்பாக நமக்கு கூறப்பட்டுள்ள எண்கள் சரியானதுதானா?; இரண்டாவதாக அவை சரியாக இருந்தால் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு இந்த வளர்ச்சி நமது நாட்டுக்கு போதுமானதா?; மூன்றாவதாக சமூகநீதியை எட்டுவதற்கு இந்த வளர்ச்சி மட்டும் போதுமானதா? என்பதாகும். இது தவிர நாட்டின் பொருளாதாரம் புதிய உச்சங்களை எட்டும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு சிறப்பாக மேம்பட்டுள்ளது என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
Bu hikaye Dinamani Coimbatore dergisinin June 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Coimbatore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Coimbatore
தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள்
கலை, அறிவியல், சமூக சேவை, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் தலைசிறந்த பங்களிப்பை நல்கிய 131 பேருக்கு நடப்பாண்டுக்கான பத்ம விருதுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
1 mins
January 26, 2026
Dinamani Coimbatore
பனி ஹாக்கி: ஐடிபிபி மகளிர் அணிக்கு தங்கம்
கேலோ இந்தியா குளிர் கால விளையாட்டுப் போட்டிகளில் பனி ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
1 min
January 26, 2026
Dinamani Coimbatore
மக்களை முதன்மையாக்கக் கொண்ட குடியரசு இந்தியா
கடந்த 1952 மே 16 அன்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அந்தத் தருணத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
2 mins
January 26, 2026
Dinamani Coimbatore
உயர் தரத்துடன் இந்திய தயாரிப்புப் பொருள்கள்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 mins
January 26, 2026
Dinamani Coimbatore
தேசிய கார் பந்தய சாம்பியன்கள் இஷான், சாய் சிவா
எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய கார் பந்தய போட்டியில் இஷான் மாதேஷ், சாய் சிவா சங்கரன் சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min
January 26, 2026
Dinamani Coimbatore
ஐபிஎஸ் உயரதிகாரி சாயா சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு
இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரியும் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவருமான சாயா சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்தை மத்திய உள்துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
1 min
January 26, 2026
Dinamani Coimbatore
வளர்ந்த பாரதத்துக்கு மகளிர் பங்களிப்பு முக்கியம்
குடியரசுத் தலைவர் உரை
2 mins
January 26, 2026
Dinamani Coimbatore
தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்
விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
1 min
January 25, 2026
Dinamani Coimbatore
பறவைகளைக் காக்க தூரிகை!
'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.
2 mins
January 25, 2026
Dinamani Coimbatore
மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விளம்பர தூதர் நடிகர் எம்.சசிகுமார்
மினிஸ்டர் ஒயிட் ஆடைகள் விற்பனை நிறுவனம் தனது விளம்பர தூதராக நடிகரும், இயக்குநருமான எம். சசிகுமாரை அறிவித்துள்ளது.
1 min
January 25, 2026
Translate
Change font size

