காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் உத்தரவின்படி வரும் ஜூன் மாதம் வழங்கப்படவேண்டியது உள்பட 16.6 டிஎம்சி நீரை பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.ட பிள்யு.ஆர்.சி.) கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், பருவமழை பெய்தால்தான் தண்ணீர் வழங்கப்படும் என கர்நாடகம் தெரிவித்தது.
காவிரி நீர் ஒழங்காற்றுக் குழுவின் 96-ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத்குப்தா தலைமையில் வியாழக்கிழமை காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த 2022-23 நீர் ஆண்டில் காவிரிப் படுகையின் விளைச்சல் குறித்த மதிப்பீடு, காவிரிப் படுகையின் நீரியல்சார் வானிலை நிலைமை குறித்த ஆய்வுகளின் தகவல்கள், பிலிகுண்டுலு மற்றும் காரைக்கால் பகுதியில் நீரோட்டம் குறித்த விவரங்கள் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட் டன.
கூட்டத்தில் கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முன்வைத்த வாதங்களுக்குப் பிறகு தமிழகம் தரப்பில் முழுமையான விவரங்கள் முன்வைக்கப்பட்டு வாதிடப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் கர்நாடகம் வழங்க வேண்டிய மொத்த தண்ணீர் அளவு 177.25 டிஎம்சி. இதன்படி பிலுகுண்டுலுவில் கடந்த 2023, ஜூன் 1 முதல் நிகழ் மே 13-ஆம் தேதி வரை விடுவிக்க வேண்டிய நீரின் அளவு 175.7 டிஎம்சி.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 17, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமெரிக்காவின் காஸா போர் நிறுத்த திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
காஸாவில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இந்தியா - அமெரிக்கா மோதல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் புதன்கிழமை மோதுகிறது.
மத்திய அமைச்சரவையில் வாரிசுகள்: பிரதமர் மோடி தோற்றிருப்பார்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இதுவே பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சித்துள்ளார்.
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்