மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பார் யாங்கண்டதில் என்றார் வள்ளுவர். தோற்றத்தில் மக்களை போலவே கயவர் உள்ளனர், இந்த ஒற்றுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று வியக்கிறார். மனிதனிடம் அந்தக் கொடூரம் ஒளிந்திருக்கிறது. எப்போது மிருகமாவான் என்று கணிக்க முடியாது. நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் மிருகத்தனம்தான் எங்கும் பரவியிருப்பதை நிரூபிக்கின்றது.
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள், மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் மோதல்களில் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை கறாரான நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராக இயங்கும். எந்த அளவில் இத்தகைய வழக்குகள் நேர்மையாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை சட்டப்படி பெறப்படுகிறது என்பது காவல்துறையின் செயல்பாடுகளின் அளவுகோலாக கருதப்படும்.
பொது இடங்களில் வெட்டு குத்து நடைபெறுவது சமுதாயத்தில் பீதியை கிளப்பும். கொடூரமான கொலைகள், சமீபத்தில் நெல்லையில் நடந்தது போல் வெட்டிக் கொலை செய்து தீக்கிரையான உடல் வீசப்படுவது போன்ற கொலைகள் பயங்கர சூழலை உருவாக்கும். இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையும். காவல்துறை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத மக்களின் ஒத்துழைப்பு அற்றுப்போகும். இதுவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு வித்திடும்.
தேசிய குற்ற ஆவண வாரியம் 2022-ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் நிகழ்ந்த குற்றங்களும் அதன் காரிய காரணங்களும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்திய தண்டனை சட்டப்படி பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35.61 லட்சம். தமிழ்நாட்டில் 1.91 லட்சம். மாநிலங்களில் ஆண்டுதோறும் வழக்குகள் குறையலாம் அதிகமாகலாம். ஆனால் தமிழ்நாட்டில் 2021-இல் பதியப்பட்ட வழக்குகள் 3.22 லட்சம், 2020-இல் 8.9 லட்சம். 2022-இல் 1.91 லட்சம் வழக்குகள். முந்தைய வருடங்களைவிட 300% சரிவு ஆச்சரியம் அளிக்கிறது. முழுமையாக வழக்குகள் பதியப்படுகிறதா என்பதை தலைமை கண்காணிக்க வேண்டும்.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம் பிரதமரின் 45 மணி நேர தியானம் தொடக்கம்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேர தியானத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கினார்.
‘அக்னிபான்’ ராக்கெட் திட்டம் வெற்றி
தனியார் புத்தாக்க நிறுவனம் தயாரித்த 'அக்னிபான் சார்டெட் ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை (மே 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜம்முவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவில் 150 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்தனர்; 57 பேர் காயமடைந்தனர்.
76 நாள்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு
57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
பிரதமர் பதவியின் மாண்பை சீர்குலைத்தவர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
சிறார் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோருக்கு 3 மாதம் சிறை
நாளைமுதல் அமல்
அந்நிய நேரடி முதலீடு 4,442 கோடி டாலராகச் சரிவு
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 4,442 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஸ்வியாடெக்
டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், உலகின் நம்பா் 3 வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் தங்கள் பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ரூ.500 நோட்டுகளின் பங்கு 86.5 சதவீதமாக அதிகரிப்பு
நாட்டில் ஒட்டுமொத்தமாக உள்ள பணத்தின் அளவில் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு கடந்த மாா்ச் 2024 வரை 86.5 சதவீதமாக அதிகரித்ததாக ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு; நவீனமயமாகும் கல்வி
கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.