உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டில் 18-ஆவது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழுகட்டத் தேர்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி கடந்த இருமுறை போட்டியிட்டு வென்ற வாரணாசியில் மீண்டும் களம் காண்கிறார்.
இத்தொகுதியில் 7-ஆவது மற்றும் இறுதிக் கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.
வாரணாசியில் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக அங்குள்ள தசாசுவ மேத படித்துறையில் பிரதமர் வழிபாடு நடத்தினார். வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சடங்குகளை மேற்கொண்டு, கங்கை நதிக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
பின்னர், பயணிகள் கப்பல் மூலம் நமோ படித்துறைக்குச் சென்ற பிரதமர், அங்கிருந்து கால பைரவர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
தொடர்ந்து, வாரணாசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் வாரணாசி வேட்பாளராக தன்னை முன்மொழியும் இரு நபர்களுடன் சென்று, வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
வாரணாசி தொகுதியைச் சேர்ந்த 4 பேர் பிரதமர் மோடியை முன் மொழிந்துள்ள நிலையில், அவர்களில் இருவர் மட்டும் வேட்புமனு தாக்கலின்போது உடனிருந்தனர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 15, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ரஷியாவின் அதிநவீன போர் விமானம் அழிப்பு: உக்ரைன்
ரஷிய விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்நாட்டின் அதிநவீன போா் விமானம் ஒன்றை அழித்ததாக உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
ஓடுபாதையில் ஒரே நேரத்தில் புறப்பட்ட- தரையிறங்கிய விமானங்கள்
மும்பை விமான நிலைய சம்பவம் குறித்து விசாரணை
'நீட்' குளறுபடி: நாடாளுமன்றத்தில் மாணவர்களின் குரலாக இருப்பேன்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ‘நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
தீவிர அரசியலில் இருந்து விலகினார் வி.கே.பாண்டியன்
ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுபவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான தமிழகத்தைச் சோ்ந்த வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
'செபி' அறிக்கை அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது தொடா்பாக மத்திய அரசும், பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமும் (செபி) அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: 48,248 பேர் தேர்ச்சி
ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயா் கல்வி நிறுவனங்களின் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வின் பிரதான தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வெளியாகின. அதில், 48,248 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வெளிநாடு செல்லும் மாணவர்கள்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிக்காக லண்டன் செல்லும் மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
தென்பெண்ணை ஆற்றில் நுரை கலந்த தண்ணீர்
மத்திய நதிநீர் ஆணையம் ஆய்வு
குளிர்பானத்தில் போதை கலந்து கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
துணை நடிகை உள்பட இருவர் கைது