வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்
Dinamani Chennai|May 08, 2024
ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள் அனைவருக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்த செய்தி நினைவுக்கு வரும். உத்தரமேரூர் கல்வெட்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தலில் நிற்பவருக்குத் தேவையான தகுதிகள், எவையெல்லாம் தகுதியின்மை என்பன போன்ற தகவல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி பெற்றவரின் அதிகார வரம்பு, பொறுப்பு, முறைகேடு நடந்துவிட்டால் அதன் விளைவும் தண்டனையும் என விரியும் குறிப்புக்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

தகுதி உடையவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி நமது முன்னோரின் தெளிந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தகுதி இழப்பு பற்றிய செய்திகள் இன்னும்கூட நாம் ஜனநாயகப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. உத்தரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்தரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோயிலில், முதலாம் பராந்தக சோழனின் (907-955ஆம் ஆண்டு) 12-ஆம் ஆட்சி ஆண்டிலும், 14- ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஆகும். சோழர்களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் நிறுவுகின்றன.

இந்தக் கல்வெட்டுகளின் காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் பதினோரு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய கிராமிய உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சி முறை ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால், ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏதென்ஸ் நகரில் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள "டெமோகிராடிக்கா' என்ற ஜனநாயக அமைப்பு செயல்பட்டதைப் பார்க்கிறோம்.

உத்தரமேரூரில் சொல்லியிருக்கும் குடவோலை முறையைப் போலவே ஏதென்ஸிலும் இரண்டு குடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஆதரவு நிலை, எதிர்நிலை என ரகசியமாகக் கற்களை இடுவதன் மூலம் கணிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடும் "அசெம்பிளி' என்ற ஆட்சி மன்றம் அமைத்து செயல்பட்டார்கள் என்பதில் இருந்தே உலகின் ஜனநாயக சித்தாந்தம் தொடங்குகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.

ஜனநாயகம் என்பது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமரச சிந்தனையின் வெளிப்பாடு. அனைவருக்கும் அனைத்து வளங்கள் மற்றும் அதிகாரத்தில் சமமான பங்கு உண்டு என்பதை நிலைநாட்டவே ஏற்பட்டது ஜனநாயகம். பாரத தேசத்தைப் பொருத்தவரை, அனைத்து ஜீவராசிகளும் இறைவனின் அம்சம் என்ற கோட்பாடும் சித்தாந்தமும் கொண்டது.

இந்த சிந்தனையே இந்த மண்ணில் ஜனநாயக நடைமுறையை சுலபமாக்கியிருந்தது என்பதுடன் இயல்பாக்கியிருந்தது. நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டிலிருந்தும் முன் நகர்ந்து பார்த்தோமானால் அது ரிக் வேதத்தில் கொண்டுபோய் நம்மை நிறுத்துகிறது.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

Bu hikaye Dinamani Chennai dergisinin May 08, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

DINAMANI CHENNAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
Dinamani Chennai

காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

காஸாவில் நிரந்த போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 05, 2024
வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்
Dinamani Chennai

வெற்றியுடன் தொடங்கியது ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
June 05, 2024
7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி!
Dinamani Chennai

7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமித் ஷா இமாலய வெற்றி!

மக்களவைத் தோ்தலில் குஜராத்தில் உள்ள காந்திநகா் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, 7.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றிபெற்றாா்.

time-read
1 min  |
June 05, 2024
தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7முதல் வாபஸ்
Dinamani Chennai

தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 7முதல் வாபஸ்

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் ஜூன் 7-ஆம் தேதி முதல் வாபஸ் பெறப்படுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 05, 2024
மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு
Dinamani Chennai

மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு

மக்களைப் பிளவுபடுத்த நினைத்த பாஜகவுக்கு எதிரான மக்களின் தீா்ப்பு என்று மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

time-read
1 min  |
June 05, 2024
உ.பி.: படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ்
Dinamani Chennai

உ.பி.: படுதோல்வியைச் சந்தித்த பகுஜன் சமாஜ்

உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் குரலாக தன்னை முன்னிருத்தி வரும் முன்னாள் முதல்வா் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மக்களவைத் தோ்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளது.

time-read
1 min  |
June 05, 2024
இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
Dinamani Chennai

இந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் சாதனை: 11.75 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொகுதி பாஜக வேட்பாளா் சங்கா் லால்வானி, இந்திய தோ்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

time-read
1 min  |
June 05, 2024
அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி
Dinamani Chennai

அரக்கோணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 4-ஆவது முறையாக வெற்றி

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் 4 -ஆவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதாா்.

time-read
1 min  |
June 05, 2024
Dinamani Chennai

வடசென்னை: கலாநிதி வீராசாமி வெற்றி

வாக்கு வித்தியாசம் 3.39 லட்சம்

time-read
1 min  |
June 05, 2024
தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Dinamani Chennai

தென்சென்னை: தமிழச்சி தங்கபாண்டியன் 2.26 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தமிழச்சி தங்க பாண்டியன் 2 லட்சத்து 26,016 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றாா்.

time-read
1 min  |
June 05, 2024