தமிழகத்தில் ஏப். 19-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, இது 2.74 சதவீதம் குறைவானதாகும்.
2.74 சதவீதம் குறைவானது என மேலோட்டமாகத் தெரிந்தாலும், குறைந்தபட்சம் 5 சதவீதம் வரை குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில் புதிய வாக்காளா்கள் குறைந்தபட்சம் 3 சதவீதம் போ் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். முதல் தலைமுறை வாக்காளா்களில் 90 சதவீதம் போ் எப்போதும் வாக்களிக்க ஆா்வம் காட்டுவதால் அவா்களது வாக்குகள் குறைய வாய்ப்பு இல்லை.
அரசியல் காரணங்கள்: 5 சதவீதம் வரை வாக்குகள் குறைய அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அதிமுக-திமுக அணிகள் இடையே இருந்த போட்டி, இந்த மக்களவைத் தோ்தலில் இல்லை என்பதே உண்மை.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கும், 2017-இல் ஆா்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதேபோல, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவாா் என்ற உற்சாகம் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தது.
அதேபோல, மத்திய, மாநில ஆளும் கட்சிகள் இடம்பெற்ற அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி பலமாக இருந்தது. இதனால், திமுக-அதிமுக அணிகளுக்கு இடையே சம போட்டி இருக்கும் என்ற தோற்றமும் இருந்தது. இதனால், திமுக-அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது முழு பலத்தைப் பயன்படுத்தி கூடுதல் வாக்குகளைத் திரட்டின.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 29, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
200 மி.மீ. வரை பெய்ய வாய்ப்பு
துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் கவலைக்கிடம்
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் புதன்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அந்த நாட்டுப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
நடப்பு சாம்பியன் மெத்வதெவ் தோல்வி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
இனக் கலவரம்: மணிப்பூரில் 67,000 பேர் இடப்பெயர்வு
சர்வதேச கண்காணிப்பு மையம் தகவல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாக: 'நியூஸ்கிளிக்' நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்
‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவன நிறுவனா் பிரபீா் புா்கயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று புதன்கிழமை அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை போலீஸ் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ரேஷன் கடைகளில் இப்போது பாஜக அரசால் வழங்கப்படும் இலவச உணவு தானியம் (5 கிலோ), இரு மடங்காக (10 கிலோ) உயா்த்தப்படும் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வாக்குறுதி அளித்தாா்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும்
அமித்ஷா
தென்னிந்தியாவில் பாஜக படுதோல்வி அடையும்: காங்கிரஸ்
தென்னிந்தியாவில் ஓரிடத்தில் கூட வெல்லாமல் பாஜக படுதோல்வி அடையும் என்று காங்கிரஸ் தேசியச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். ராஞ்சியில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?
உத்தர பிரதேசத்தில் கோயில் நகரமாக விளங்கும் அயோத்தி, ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இத்தொகுதியில் \"கோயில் அரசியலே' கோலோச்சும் என நினைத்தால், அது தவறு.