மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
'ஒரு நடைமுறை மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை தெரிவிப்பது தேவையற்ற சந்தேகங்களை வளர்க்கும் என்று உச்சநீதிமன்றம் குறிப் பிட்டது.
இந்தத் தீர்ப்பின் மூலம் தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர பயன்பாட்டு நடைமுறையை உச்சநீ திமன்றம் உறுதி செய்துள்ளது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன. முதலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபேட் இயந்திர ஒப்புகைச் சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்பட்டது. பின்னர், 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தற்போது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு ஒப்பீடு செய்யப்படு கிறது.
இந்தச் சூழலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று கோரி ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்பட மேலும் சிலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதோடு, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங் கர்தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த புதன்கிழமை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அறிமு கப்படுத்த வேண்டும் எனக் கோரிய மனு உள்பட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், இரு ஒருமித்த தீர்ப்புகளை அளித்தனர்.
Bu hikaye Dinamani Chennai dergisinin April 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin April 27, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
பிற மாநிலங்களும் பின்பற்றும் தமிழக அரசின் நலத் திட்டங்கள்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்கள் வெப்பத்தின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 சதவீதம் உயர்ந்த கனிம உற்பத்தி
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.
ராஃபா எல்லையைக் கைப்பற்றியது இஸ்ரேல்
எகிப்தையும் காஸாவின் ராஃபா நகரையும் இணைக்கும் முக்கிய எல்லை வழித்தடத்தை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்
கஜஸ்தானில் நடைபெற்ற 22 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் இளையோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.
இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு
கடந்த 2022-23 வரையிலான 3 ஆண்டு காலத்தில், இந்தியாவில் குடும்ப சேமிப்புகள் ரூ.14.16 லட்சம் கோடியாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் தேசிய கணக்குப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை வென்றது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்
மாலத்தீவில் மருத்தவ ஹெலிகாப்டா்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 51 இந்திய ராணுவ வீரா்கள் வெளியேறிவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.