மேலும், நாடாளுமன்றம், பேரவை உறுப்பினா்கள் லஞ்சம் வாங்குவதும் ஊழலில் ஈடுபடுவதும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையை சிதைத்துவிடும்; உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின்கீழ் பாதுகாக்கப்பட்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தகைய லஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பை உறுதி செய்து, கடந்த 1998-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்திருந்தநிலையில், அந்தத் தீா்ப்பை சுமாா் 25 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இப்போது ரத்து செய்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்: கடந்த 1993-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட்டபோது, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் சிபு சோரன் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் சிலா் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த எம்.பி.க்களின் ஆதரவால் நரசிம்ம ராவ் அரசு தப்பியது.
இதைத் தொடா்ந்து, சிபு சோரன் உள்பட அக்கட்சி எம்.பி.க்கள் 5 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 105 (2), 194 (2) பிரிவுகளின்கீழ், குற்றவியல் விசாரணையில் இருந்து உறுப்பினா்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாக குறிப்பிட்டு, சிபு சோரன் உள்ளிட்டோா் மீதான வழக்கை உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த 1998-ஆம் ஆண்டில் ரத்து செய்தது.
Bu hikaye Dinamani Chennai dergisinin March 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin March 05, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
'சூப்பர் ஓவர்' சாதனை: வென்றது நமீபியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் நமீபியா, ‘சூப்பா் ஓவரில்’ ஓமனை திங்கள்கிழமை வென்றது.
இஸ்ரேல் படைப் பிரிவு தலைமையகத்தில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல்
இஸ்ரேல் ராணுவ படைப் பிரிவு தலைமையகத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் திங்கள்கிழமை அறிவித்தனா்.
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபர்
மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக ஆளுங்கட்சி வேட்பாளா் கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவிருக்கிறாா்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா்.
18-ஆவது மக்களவை உறுப்பினர்களுக்கு...
பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகள்
உயர்நீதிமன்றம் உத்தரவு
பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் 8,209 அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் பணிபுரிய தற்காலிக கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்
சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில்,வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.