தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் உறவினா், ஆதரவாளா்கள், அரசு ஒப்பந்ததாரா்களின் வீடுகளில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராகவும், கரூா் மாவட்ட திமுக செயலராகவும் இருக்கும் வி.செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் 2018-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனா்.
இந்த மோசடியில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மத்தியக் குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும், அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி, உயா்நீதிமன்றத்தில் முறையிட்டாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மத்திய குற்றப் பிரிவு வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அமலாக்கத் துறை விசாரணை அனுமதி வழங்கியும் உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பு கூறியது.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 27, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 27, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை
சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.
நடால் முதல் சுற்றிலேயே தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.
‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்
‘மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய அக்னிபத் திட்டம் தூக்கியெறியப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு
தனது முன்னாள் மேலாளா் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குா்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து தீா்ப்பளித்தது.
பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே
‘மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்துவிட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை
சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் அரசுப் பணியாளர், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.