Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl
The Perfect Holiday Gift Gift Now

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

DINACHEITHI - MADURAI

|

September 29, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்த மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப்பற்றியோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.

கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

DINACHEITHI - MADURAI'den DAHA FAZLA HİKAYE

DINACHEITHI - MADURAI

பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு

\"தொடர் வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஊழியர்களுடன் வரும் 22-ந்தேதி அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

அரசிதழில் ஜன. 5-ம் தேதிக்குள் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது: தமிழ்நாட்டில் 97,37,832 பேரின் பெயர்கள் நீக்கம்

ஜன. 18-ந் தேதிக்குள் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

December 20, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம்

பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கொளத்தூர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகளாகவே எண்ணுகிறேன்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 min

December 19, 2025

DINACHEITHI - MADURAI

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, புதிய பெயர் : எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?

மு.க. ஸ்டாலின் கேள்வி

time to read

1 min

December 18, 2025

DINACHEITHI - MADURAI

முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை

பொற்கோவிலில் தியான மண்டபத்தை திறந்து வைக்கிறார்

time to read

1 min

December 17, 2025

DINACHEITHI - MADURAI

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை டிச 17தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு ஹஜ் இல்லம்” கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

time to read

1 min

December 17, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 14, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back