அது 1991-96. அ.தி.மு.க ஆட்சி.
‘ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுக்கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டான் பங்கேற்பார்' என அறிவிப்பு வெளியானது. 'எப்படியும் அம்மா ஆட்சிக்கு எதிராகத்தான் பேசுவார்; வெற்றிகொண்டானுக்கு பதிலடி கொடுத்து நல்ல பெயரை வாங்க வேண்டும்' என அதிரடிக்குத் தயாரானார், ஸ்ரீவில்லிபுத்தூரின் மகுடம் சூடாத மன்னனாக இருந்த தாமரைக்கனி. ரயில் நிலையத்தில் வைத்தே, வெற்றிகொண்டானின் கார் மீது கடப்பாரை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் படுகாயத்தை எதிர்கொண்டார், வெற்றிகொண்டான். அன்று முதல் இறப்புக்கு ஓரிருஆண்டுகள் முன் வரையில் தி.மு.க.வின் கொள்கை களை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதில் தனக்கென ஒரு கூட்டத்தை அவர் வைத்திருந்தார்.
‘அ.தி.மு.க எதிர்ப்பு' என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து களமாடியதன் விளைவாக, மரணிக்கும் தருவாயிலும் 66 வழக்குகளை சுமந்து கொண்டிருந்தார், வெற்றிகொண்டான். எந்தவிதமான பதவியையும் அனுபவிக்காமலும் அவர் இறந்துபோனார். இது ஒரு காலம்.
இன்று நடப்பது என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க கூட் டத்தில் பங்கேற்பார்' என ஒரு பேச்சாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது.
'சம்பந்தப்பட்டவர் இறந்து நான்காண்டுகள் ஆகிவிட் டதே?' எனப் பதறியடியே கூறப்பட, ‘அப்படியா.. பெயரை நீக்கிவிடுகிறோம்' எனப் பதில் கிடைத்து உள்ளது. ஆனாலும், மறு ஆண்டும் அவரது பெயர் பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்ததுதான் கொடுமை என நம்மிடம் வருத்தம் பகிர்ந்தார் பேச்சாளர் ஒருவர்.
‘ஒரு பேச்சாளர் உயிரோடு இருக்கிறாரா... இல்லையா?' என்பதையே கட்சி நிர்வாகிகள் அறிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் பேச்சாளர்களின் நிலை இருக்கிறது என்பது எவ்வளவு பெரும் துயரம்.
Bu hikaye Andhimazhai dergisinin March 24 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Andhimazhai dergisinin March 24 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வாக்காளப் பெருமக்களே...
இந்த காலத்திலும் பேச்சாளர்களை கட்சிகள் நம்புகின்றனவா?
மலையாள ஆதிக்கம்!
வடக்குப்பட்டி ராமசாமி. ‘நான் அந்த ராமசாமி இல்ல‘ என்ற டீசரில் கவனம் பெற்ற இந்தப் படம், கார்த்திக் யோகி இயக்கத் தில் சந்தானம் - கோ நடித்து வெளியானது.
'என்னைப் பேச வைக்காதீர்கள்!'
தமிழ்நாட்டில் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் திராவிட அரசியல்வாதிகள். ஆளுக்கொரு விதமாகப் பேசுவார்கள். ஈவெரா ஒரு மாதிரி பேசு வார். அவர் பேச்சு மக்களுடன் சட்டென இணைவதாக, மக்கள் மொழியிலேயே இருக்கும். அண்ணாதுரை அடுக்குமொழியில் பேசுவார். கருணாநிதியும் அப்படியே.
'ஜெயிப்பது நிச்சயமில்லை!’
1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்... சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றாகத்தான் நடக்கும்.
எதார்த்தமும் எளிமையும்
2019 நாடாளுமன்றத் தேர்தல். அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக திமுக அணுகியது. அந்த பிரச்சா ரத்தில் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலினும் களமிறக்கப்பட்டார். அதுவரை திமுகவில் பல்வேறு போராட் டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ஒருவராக பங்கேற்றுவந்தவர் உதயநிதி.
பெரியோர்களே, தாய்மார்களே-மாறிவரும் பிரச்சார முகங்கள்
அது 2009. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கிறார் சுப.வீரபாண்டியன். அது தொடர்பாக திமுக தலைவரிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது அவரை மீண்டும் அழைக்கிறார் அவர்.
நமது குழந்தைகளை நாம்தான் வளர்க்கிறோமா?
சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. ஐம்பதுகளைக்கடந்த ஓட்டுநர். என்ன சார் ரோடு... என்பதில் ஆரம்பித்த பேச்சு நடுவீட்டு வரைக்கும் நகர்ந்தது.
சாத்தான் கடவுளாக இருந்த காலம்!
ஆனந்தவிகடன் இதழில் 122 வாரங்கள் பெருகிப் பிரவகித்த நீரதிகாரம் நாவலின் தோற்றுவாய் குறித்து யோசித்தால் ஆச்சரியம்தான் மிஞ்சுகிறது.
குந்தவை நாச்சியார் குரல் கிருத்திகா நெல்சன்
சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது.
போர்க்குணத்துக்கு வயது 99!
நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில் தென்மாவட்டத்தின் உள்ளொடுங்கிய சாலை வழியே காரில் போய்க் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவரும், அப்போது எம்.எல்.ஏ. ஆகவுமிருந்த பீட்டர் அல்போன்ஸ்.. அப்போது ஊரைவிட்டு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் சிறுபையைத் தலைக்கு வைத்து ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறார்.